முகப்பு
உலகம்

காஸா புதைகுழியாக மாறும்: ஹமாஸ் சூளுரை!

இன்னும் சில நாள்களில் மேலும் சில பிணைக்கைதிகளை விடுவிப்பதாக ஹமாஸ் தெரிவித்துள்ளது.

Updated On : 1 நவம்பர் 2023, 11:57 am IST
தாக்குதலுக்கு உள்ளான ஜபாலியா அகதிகள் முகாம்
பகிர்:

இஸ்ரேல் - ஹமாஸ் இடையே களத்தில் நேரடியாக மோதல் தொடங்கியிருக்கும் நிலையில் இருபக்கமும் கணிசமான பாதிப்புகள் ஏற்பட்டு வருகின்றன.

ஹமாஸின் ஆயுதக் குழு, செவ்வாய்கிழமை (அக்.31) வெளியிட்டுள்ள குறிப்பில் தங்களின் பிடியில் இருக்கும் வெளிநாட்டவர் சிலரை இன்னும் சில நாள்களில் விடுவிப்பதாகவும் தரைவழியே முன்னேற தொடங்கியிருக்கும் இஸ்ரேல் ராணுவத்துக்கு காஸா மரணக்குழியாக மாறும் எனவும் தெரிவித்துள்ளது.

“இடையீட்டாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளோம். வெளிநாட்டவர் சிலரை இன்னும் சில நாட்களில் விடுதலை செய்வோம். எதிரிகளின் படைவீரர்கள், அரசியல் மற்றும் ராணுவ தலைமை ஆகியோருக்கு காஸா மயானமாகவும் புதைகுழியாகவும் மாறும்” என அல்-காஸம் பிரிவின் செய்தி தொடர்பாளர் அபு ஒபேதா தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

ஹமாஸ் பிடியில் 240 பிணைக்கைதிகள் இருக்கலாம் எனக் கருதப்படுகிறது. அவர்களில் 5 பேர் விடுவிக்கப்பட்டுள்ளனர். 

காஸாவில் தொடர்ந்து தாக்குதல் நடந்து வரும் நிலையில் வான் வழி தாக்குதலையும் தரை வழி தாக்குதலையும் ஒரே நேரத்தில் மேற்கொண்டு வருகிறது, இஸ்ரேல்.

இதுவரை காஸாவின் அமைச்சகம் சார்பில் 8,525 பேர் பலியாகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்களில் 3500 பேர் குழந்தைகள் என்பது அதிர்ச்சிக்குரியதாக உள்ளது. 

அகதிகள் முகாமில் பெரியதான ஜபாலியா முகாமில் தாக்குதல் நடத்தப்படுள்ளது. இதில் 50-க்கும் மேற்பட்ட கொல்லப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 2 இஸ்ரேல் ராணுவ வீரர்கள் உயிரழந்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments