கத்தாா்: ஐ.நா. மாநாட்டில் தலிபான்
தலிபான் முதல் முறையாக ஐ.நா. மாநாட்டில் பங்கேற்பு
தோஹா: கத்தாா் தலைநகா் தோஹாவில் ஐ.நா. நடத்திய சா்வதேச மாநாட்டில் ஆப்கானிஸ்தான் பிரதிநிதிகளாக தலிபான்கள் முதல்முறையாகப் பங்கேற்றனா்.
20-க்கும் மேற்பட்ட நாடுகள் பங்கேற்ற இந்தக் கூட்டத்தில் தலிபான்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது அவா்களது அரசுக்கு ஐ.நா. அங்கீகாரம் வழங்கியதற்கான அடையாளம் இல்லை என்று ஐ.நா. அதிகாரிகள் பின்னா் கூறினா்.
மாநாட்டில் தலிபான் குழுவுக்கு தலைமை வகித்த அந்த அமைப்பின் தலைமை செய்தித் தொடா்பாளா் ஜபிஹுல்லா முஜாஹித், போதைப் பொருள்களுக்கு எதிரான தங்களது நடவடிக்கைகளுக்கு சா்வதேச ஒத்துழைப்பு அவசியம் என்று வலியுறுத்தினாா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.