முகப்பு
உலகம்

நோயாளிகளுக்கு 12 ஆண்டுகளாக பாலியல் சித்திரவதை! மருத்துவருக்கு சிறை

300-க்கும் மேற்பட்ட நோயாளிகளுக்கு பாலியல் தொல்லையளித்த மருத்துவருக்கு சிறை தண்டனை

Updated On : 21 நவம்பர் 2024, 7:05 pm IST
- EPS
பகிர்:

குழந்தைகள் உள்பட 300-க்கும் மேற்பட்ட நோயாளிகளை மருத்துவர் ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவின் நியூயார்க்கை சேர்ந்த மருத்துவர் டேரியஸ் படூச்(57) கடந்த 12 ஆண்டுகளாக, சிறார்கள் உள்பட நோயாளிகள் பலரிடம் பாலியல் அத்துமீறல் செயல்களில் ஈடுபட்டுள்ளது தெரியவந்துள்ளது. இதையடுத்து, பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட மருத்துவருக்கு ஆயுள் தண்டனை வழங்கி நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

மேன்ஹேட்டன் பகுதியிலுள்ள பிரபல மருத்துவமனை ஒன்றில் இத்தகையதொரு மனிதநேயமற்ற செயலில் ஈடுபட்டு வந்துள்ளார் அந்த மருத்துவர். அவரால் பாதிக்கப்பட்ட 300-க்கும் மேற்பட்ட நோயாளிகள் அளித்துள்ள புகார்களின் அடிப்படையில், கடந்த மே மாதம் அவர் கைது செய்யப்பட்டார்.

Advertisement

Advertisement

பாதிக்கப்பட்ட நோயாளிகளில் 11 பேரிடம், விசாரணையின்போது நடத்தப்பட்ட மருத்துவ பரிசோதனையில் அந்த மருத்துவர் நோயாளிகளை பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கியிருப்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. நோயளிகளிடம் மருத்துவ பரிசோதனையின்போது, அதிலும் குறிப்பாக பெண்களிடம், பாலியல் பொம்மைகள் உள்ளிட்ட பிற உபகரணங்களை பயன்படுத்தி அவர் அத்துமீறி நடந்துகொண்டதும் விசாரணையில் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

கடந்த 2007-ஆம் ஆண்டிலிருந்து 2019 வரை, இத்தகைய குற்றச்செயல்களில் அவர் தொடர்ந்து ஈடுபட்டுள்ளதாக பாதிக்கப்பட்டோரின் வழக்குரைஞர் தரப்பிலிருந்து நீதிமன்றத்தில் வாதிடப்பட்டுள்ளது. நோயாளி ஒருவரை மயக்க மருந்தளித்து அவரை மருத்துவமனைக்கு வெளியே அழைத்துச் சென்று வன்கொடுமை செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மருத்துவரின் இத்தகைய காட்டுமிராண்டித்தனமான நடவடிக்கைகளால், நோயாளிகள் உடல் ரீதியாக மட்டுமல்லாது மனதளவிலும் மிகுந்த பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். “இந்த நபருக்கு எந்த தண்டனை வழங்கினாலும்சரி, பாதிக்கப்பட்டோர் அனுபவித்த வேதனை, அவர்களது வலியை திரும்பப்பெற இயலாது” என்று வழக்குரைஞர் மல்லோரி ஆலென் தெரிவித்தார்.

இந்த நிலையில், நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய உள்ளதாக மருத்துவர் தரப்பிலிருந்தும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments