முகப்பு
உலகம்

கடற்கொள்ளையர்களால் சிறைப்பிடிக்கப்பட்ட இலங்கை மீனவர்களை மீட்க இந்தியா உதவி!

சோமாலிய கடற்கொள்ளையர்களால் சிறைப்பிடிக்கப்பட்ட இலங்கையை சேர்ந்த மீனவர்களை மீட்க இந்தியாவின் உதவியை நாடியிருப்பதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.

Updated On : 28 ஜனவரி 2024, 7:28 pm IST
கோப்புப்படம்
பகிர்:

கொழும்பு : இலங்கையின்  டிகோவிடா மீன்பிடித் துறைமுகத்திலிருந்து, கடந்த 16-ஆம் தேதி கடலுக்குச் சென்ற மீன்பிடிப் படகு ஒன்று சோமாலிய கடற்கொள்ளையர்களால் சிறைப்பிடிக்கப்பட்டது. அதில் பயணம் செய்த இலங்கையை சேர்ந்த 6 மீனவர்கள்  சிறைப்பிடிக்கப்பட்டனர். எனினும், சிறைப்பிடிக்கப்பட்ட மீனவர்களை இலங்கை அரசுடன் பேச கடற்கொள்ளையர்கள் அனுமதித்திருப்பதாகவும், மீனவர்களுடன் இலங்கை அரசு தொடர்பிலிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து, சோமாலிய கடற்கொள்ளையர்களால் சிறைப்பிடிக்கப்பட்ட இலங்கையை சேர்ந்த மீனவர்களை மீட்க இந்தியாவின் உதவியை நாடியிருப்பதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.

இந்நிலையில், சிறைப்பிடிக்கப்பட்ட இலங்கை மீனவர்களை மீட்க இந்தியா உதவ முன்வந்துள்ளதாக இலங்கை கடற்படை செய்தித் தொடர்பாளர் கயான் விக்கிரமசூர்யா தெரிவித்தார்.

Advertisement

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments