பாகிஸ்தான் வெள்ளம்... (கோப்புப் படம்) ஏபி
உலகம்

பாகிஸ்தானில் கடும் வெள்ளம்: 24 மணி நேரத்தில் 30 பேர் பலி! வெடி வைத்து கரைகள் தகர்ப்பு!

பஞ்சாபில் வெள்ளத்தில் சிக்கி கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 30 பேர் பலியானது குறித்து...

இணையதளச் செய்திப் பிரிவு

பாகிஸ்தானின் பஞ்சாபில் வரலாறு காணாத வெள்ளம் ஏற்பட்டுள்ள சூழலில், அங்கு கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 30 பேர் பலியானதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் நாட்டில், மக்கள் தொகை அதிகம் நிரம்பிய பஞ்சாப் மாகாணத்தில், கடந்த ஒருவாரமாக வெள்ளம் ஏற்பட்டு சுமார் 1,700 கிராமங்கள் வெள்ள நீருக்குள் மூழ்கியுள்ளன.

இந்நிலையில், இன்று (ஆக.30) காலை முதல் மீண்டும் கனமழை பெய்து வரும் சூழலில், அங்குள்ள நீர்நிலைகள் முழுவதுமாக நிரம்பி வெள்ளத்தின் பாதிப்புகள் அதிகரிக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது. இதில், சுமார் 15 லட்சம் மக்கள் தங்களது வீடுகளை இழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, பஞ்சாப் மாகாண அமைச்சர் மர்யும் ஔரங்கசீப் கூறுகையில், கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் பஞ்சாபில் வெள்ளத்தில் சிக்கி 30 பேர் பலியானதாகவும், 2-3 நாள்களில் மட்டும் சுமார் 5 லட்சம் பேர் தங்களது வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டதாகவும் கூறியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து, ரவி, செனாப் ஆகிய நதிகளில் வெள்ளம் அதிகரித்து வருவதால், முக்கிய நகரங்கள் வெள்ள நீரில் மூழ்குவதைத் தவிர்க்க மண்டி பஹாவுத்தீன், சினியோட் உள்பட 7 பகுதிகளில் உள்ள கரைகள் அதிகாரிகளால் வெடி வைத்து தகர்க்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, பஞ்சாபில் வரும் செப்டம்பர் 2 ஆம் தேதி வரை கனமழை நீடிக்கும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அங்கிருந்து வெளியேற்றப்பட்ட லட்சக்கணக்கான மக்கள் சுமார் 351 நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: உக்ரைன்: ரஷியாவின் தாக்குதலில் முன்னாள் நாடாளுமன்றத் தலைவர் பலி!

Unprecedented floods have hit Pakistan's Punjab, with 30 people reported dead in the last 24 hours alone.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தொழில் சங்கங்களால் நாட்டின் வளர்ச்சி பாதிப்பு..! -உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி

தொடரும் காஷ்மீர் வணிகர்கள் மீதான வன்முறைகள்! உத்தரகண்டில் கும்பல் தாக்குதலில் 17 வயது சிறுவன் படுகாயம்!

அமெரிக்க தூதருடன் மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் சந்திப்பு!

அஜீத் பவாரின் இறுதிச் சடங்கில் அனுமதியின்றி பறந்த ட்ரோன்கள்! சிறைப்பிடித்த போலீஸ்!

வேளாண் பாதுகாப்புக்கு முக்கியத்துவம்: இந்தியா - கனடா அமைச்சர்கள் பேச்சு!

SCROLL FOR NEXT