FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
உலகம்

பிரேசில்: பேன்ட் பாக்கெட்டில் வைத்திருந்த மொபைல் வெடித்ததில் பெண் காயம்

பிரேசிலில் தனது பேன்ட் பாக்கெட்டில் வைத்திருந்த மொபைல் வெடித்ததில் பெண் ஒருவர் காயமடைந்தார்.

Updated On : 14 பிப்ரவரி 2025, 5:31 pm IST
காயமடைந்த பெண்.
பகிர்:

பிரேசிலில் தனது பேன்ட் பாக்கெட்டில் வைத்திருந்த மொபைல் வெடித்ததில் பெண் ஒருவர் காயமடைந்தார்.

பிரேசிலின் அனபோலிஸ் நகரில் பெண் ஒருவர் தனது கணவருடன் உள்ளூர் மளிகைக் கடையில் ஷாப்பிங் செய்துகொண்டிருந்தார்.

அப்போது அவரது பேன்ட் பாக்கெட்டில் வைத்திருந்த ஸ்மார்ட்போன் மொபைல் போன் திடீரென வெடித்தது.

Advertisement

Advertisement

உடனே அருகிலிருந்த அவரது கணவர் தீயை அணைத்தார். இந்த சம்பவத்தில் பெண்ணுக்கு கை, முன்கை, முதுகு மற்றும் பின்பகுதியில் காயம் ஏற்பட்டது.

ஓராண்டில் 10 மாதங்களும் விளையாடினால் எப்படி? கபில் தேவ் விமர்சனம்

பிறகு காயமடைந்த பெண் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

அங்கு அவருக்கு சிகிக்சை அளிக்கப்பட்டது. இந்த சம்பவம் தனது மனைவிக்கு மிகுந்த மனவேதனையை ஏற்படுத்தியதாக அவரது கணவர் உள்ளூர் ஊடகங்களுக்கு தெரிவித்தார்.

தற்போது இந்த விடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

இந்த சம்பவத்தைத் தொடர்ந்து பின் பாக்கெட்டுகளில் மொபைல் போனை எடுத்துச் செல்வதால் ஏற்படும் ஆபத்துகள் குறித்து பலர் எச்சரித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments