உக்ரைன் விவகாரம்: அமெரிக்க பிரதிநிதிகளுடன் ரஷிய அமைச்சர் பேச்சுவார்த்தை!
அமைச்சர் செர்கேய் லாவ்ரோவ் அமெரிக்க அதிகாரிகளுடன் ரியாதில் பேச்சுவார்த்தை...
மாஸ்கோ : ரஷியாவின் வெளியுறவு விவகாரங்களுக்கான அமைச்சர் செர்கேய் லாவ்ரோவ் அமெரிக்க அதிகாரிகளுடன் ரியாதில் பேச்சுவார்த்தையில் ஈடுபடுகிறார். இதற்காக அவர் இன்று அதிகாலை ரியாத் சென்றடைந்தார்.
உக்ரைன் விவகாரம் இந்த பேச்சுவார்த்தையில் முக்கிய விவாதமாக இடம்பெறுமென எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னதாக, ரஷிய அதிபர் விளாதிமீர் புதினும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பும் தொலைபேசி வழியாக உரையாடினர். அப்போது உக்ரைனில் போரை உடனடியாக முடிவுக்குக் கொண்டுவர ரஷியாவுக்கு அமெரிக்க தரப்பு வலியுறுத்தியதைத் தொடர்ந்து, இதனை புதின் ஏற்றுக்கொண்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.