FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
உலகம்

ஓஹியோ மாகாண ஆளுநர் பதவிக்கு போட்டியிடும் விவேக் ராமசுவாமி!

இந்திய அமெரிக்கரான விவேக் ராமசுவாமி ஓஹியொ மாகாண ஆளுநர் பதவிக்கு போட்டியிட உள்ளதாகத் தகவல்...

Updated On : 18 ஜனவரி 2025, 3:57 pm IST
விவேக் ராமசுவாமி
பகிர்:

இந்திய அமெரிக்க தொழிலதிபரும் அரசியல்வாதியுமான விவேக் ராமசுவாமி ஓஹியோ மாகாண ஆளுநர் பதவிக்குப் போட்டியிட இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்திய அமெரிக்கத் தொழிலதிபர் விவேக் ராமசுவாமி (39) கடந்தாண்டு குடியரசுக் கட்சியின் அதிபர் வேட்பாளர் தேர்வு பட்டியலில் இருந்தார். இந்த நிலையில், டிரம்ப் அதிபர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு வெற்றிபெற்ற நிலையில் டிரம்ப் நிர்வாகத்தின் கீழ் இயங்கும் அரசின் செயல்திறன் துறைக்கு எலான் மஸ்க்குடன் இணைந்து விவேக் ராமசுவாமி தலைமை தாங்குவார் என அறிவிக்கப்பட்டது.

விவேக் ராமசுவாமி சின்சினாட்டி நகரில் இந்தியப் பெற்றோருக்கு பிறந்தார். இவர் ஹார்வார்டு மற்றும் யேல் பல்கலைக்கழகங்களில் படித்தவர்.

Advertisement

Advertisement

டிரம்ப்பின் நம்பிக்கைகுரியவராக அறியப்படும் விவேக் ஓஹியோ மாகாணத்தின் ஆளுநராகப் போட்டியிட இருப்பதாகவும் அதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் செய்திகள் வெளியாகியுள்ளன.

அரசின் செயல்திறன் துறையை வெற்றிகரமாக செயல்படுத்துவதும், ஓஹியோ மாகாண ஆளுநர் பதவிக்கு போட்டியிடுவதுமே விவேக் ராமசுவாமியின் தற்போதைய குறிக்கோள் என்றும், அந்த முடிவில் எந்த மாற்றமும் இன்றி அவர் அதற்கான வேலைகளில் ஈடுபட்டு வருவதாகவும் அவரது நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஆளுநர் பதவிக்கு போட்டியிடும் அறிவிப்பை வெளியிடுவதற்கான அதிகாரப்பூர்வ வரைவு தயாராக உள்ள நிலையில், விரைவில் அந்த அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

ஓஹியோ மாகாணத் தேர்தல் வருகிற நவம்பர் மாதம் நடக்கவுள்ளது. விவேக் ராமசுவாமி வெற்றி பெற்றால் தற்போதைய ஆளுநர் மைக் டிவைனுக்கு மாற்றாக அவர் ஆளுநராக பதவியேற்பார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments