கோப்புப் படம் 
உலகம்

4 படகுகள் கவிழ்ந்து விபத்து: 2 பேர் பலி; 186 பேர் மாயம்!

ஏமன் நாட்டில் 2 படகுகள் கவிழ்ந்து விபத்தானதில் 186 பேர் மாயம்; ஆப்ரிக்காவில் 2 படகுகள் விபத்தானதில் 2 பேர் பலி

DIN

ஏமன் நாட்டில் 2 படகுகள் கவிழ்ந்து விபத்தானதில் 186 பேர் காணாமல் போய்விட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

ஏமன் நாட்டில், வியாழக்கிழமை 2 படகுகள் கவிழ்ந்த விபத்தில் இரண்டு பேர் மீட்கப்பட்ட நிலையில், 181 புலம்பெயர்ந்தோர் உள்பட 5 பணியாளர்களும் காணாமல் போய்விட்டதாக ஐக்கிய நாடுகளின் புலம்பெயர்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதுமட்டுமின்றி, ஆப்ரிக்க நாடான ஜிபூட்டியிலும் வேறு 2 படகுகளும் கவிழ்ந்து விபத்தானது. இந்த விபத்தில் 2 பேர் உயிரிழந்த நிலையில், படகில் பயணித்த மற்ற அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டு விட்டனர்.

கடந்த 2024 ஆம் ஆண்டில் மட்டும், ஆப்ரிக்காவின் கொம்பு பகுதியிலிருந்து ஏமன் நாட்டுக்கு செங்கடல் - ஏடன் வளைகுடா பகுதியாகச் சென்றவர்களில் 558 பேர் பலியானதாக ஐக்கிய நாடுகளின் புலம்பெயர்வு நிறுவனம் கூறுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

விழிகளால் பேசு... ஹூமா குரேஷி

இந்தப் படத்தைப் பார்த்தீர்களா? பிளாக்பஸ்டரான சு ஃப்ரம் சோ!

ஆணவக் கொலை: அன்று நடந்தது என்ன? - கவினின் காதலி பரபரப்பு விடியோ!

வெளிநாட்டில் சவாலை முறியடிப்பது சிறப்பான விஷயம்: துருவ் ஜுரெல்

இதுவே இறுதியாக இருக்கட்டும்! தொடரும் ஆணவக் கொலைகளின் பரிணாம வளர்ச்சி!

SCROLL FOR NEXT