4 படகுகள் கவிழ்ந்து விபத்து: 2 பேர் பலி; 186 பேர் மாயம்!
ஏமன் நாட்டில் 2 படகுகள் கவிழ்ந்து விபத்தானதில் 186 பேர் மாயம்; ஆப்ரிக்காவில் 2 படகுகள் விபத்தானதில் 2 பேர் பலி
ஏமன் நாட்டில் 2 படகுகள் கவிழ்ந்து விபத்தானதில் 186 பேர் காணாமல் போய்விட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
ஏமன் நாட்டில், வியாழக்கிழமை 2 படகுகள் கவிழ்ந்த விபத்தில் இரண்டு பேர் மீட்கப்பட்ட நிலையில், 181 புலம்பெயர்ந்தோர் உள்பட 5 பணியாளர்களும் காணாமல் போய்விட்டதாக ஐக்கிய நாடுகளின் புலம்பெயர்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதுமட்டுமின்றி, ஆப்ரிக்க நாடான ஜிபூட்டியிலும் வேறு 2 படகுகளும் கவிழ்ந்து விபத்தானது. இந்த விபத்தில் 2 பேர் உயிரிழந்த நிலையில், படகில் பயணித்த மற்ற அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டு விட்டனர்.
Advertisement
Advertisement
கடந்த 2024 ஆம் ஆண்டில் மட்டும், ஆப்ரிக்காவின் கொம்பு பகுதியிலிருந்து ஏமன் நாட்டுக்கு செங்கடல் - ஏடன் வளைகுடா பகுதியாகச் சென்றவர்களில் 558 பேர் பலியானதாக ஐக்கிய நாடுகளின் புலம்பெயர்வு நிறுவனம் கூறுகிறது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.