கோப்புப் படம் 
உலகம்

4 படகுகள் கவிழ்ந்து விபத்து: 2 பேர் பலி; 186 பேர் மாயம்!

ஏமன் நாட்டில் 2 படகுகள் கவிழ்ந்து விபத்தானதில் 186 பேர் மாயம்; ஆப்ரிக்காவில் 2 படகுகள் விபத்தானதில் 2 பேர் பலி

DIN

ஏமன் நாட்டில் 2 படகுகள் கவிழ்ந்து விபத்தானதில் 186 பேர் காணாமல் போய்விட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

ஏமன் நாட்டில், வியாழக்கிழமை 2 படகுகள் கவிழ்ந்த விபத்தில் இரண்டு பேர் மீட்கப்பட்ட நிலையில், 181 புலம்பெயர்ந்தோர் உள்பட 5 பணியாளர்களும் காணாமல் போய்விட்டதாக ஐக்கிய நாடுகளின் புலம்பெயர்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதுமட்டுமின்றி, ஆப்ரிக்க நாடான ஜிபூட்டியிலும் வேறு 2 படகுகளும் கவிழ்ந்து விபத்தானது. இந்த விபத்தில் 2 பேர் உயிரிழந்த நிலையில், படகில் பயணித்த மற்ற அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டு விட்டனர்.

கடந்த 2024 ஆம் ஆண்டில் மட்டும், ஆப்ரிக்காவின் கொம்பு பகுதியிலிருந்து ஏமன் நாட்டுக்கு செங்கடல் - ஏடன் வளைகுடா பகுதியாகச் சென்றவர்களில் 558 பேர் பலியானதாக ஐக்கிய நாடுகளின் புலம்பெயர்வு நிறுவனம் கூறுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நாளைய மின் தடை

‘மனிதாபிமானம் பற்றி விடியோவை பாா்த்துவிட்டு பேசுவோம்’ - தெருநாய் விவகாரத்தில் உச்சநீதிமன்றம் காட்டம்

ஐஎஸ்பிஎல் சீசன் 3 மொத்த பரிசுத் தொகை ரூ.6 கோடி

பழம் கேட்டு வாங்கி சாப்பிட்ட பெருமாள்!

ரூ.28.71 லட்சத்தில் திட்டப் பணிகளுக்கு அடிக்கல்

SCROLL FOR NEXT