முகப்பு
உலகம்

டிக்டாக் செயலிக்கு ரூ.5 லட்சம் கோடி அபராதம்!

வெளிப்படைத் தன்மை இல்லாததால், டிக்டாக் நிறுவனத்துக்கு ஐரோப்பிய அரசு அபராதம்

Updated On : 2 மே 2025, 4:23 pm IST
- ENS
பகிர்:

டிக்டாக்கின் செயலிக்கு 600 மில்லியன் டாலர் அபராதம் விதித்து, ஐரோப்பிய அரசு உத்தரவிட்டது.

சீனாவைச் சேர்ந்த பொழுதுபோக்கு செயலியான டிக்டாக் நிறுவனம், தங்கள் பயனர்களின் தரவுகள் எங்கு அனுப்பப்படுகிறது என்பது குறித்து வெளிப்படையாக இல்லை என்றுகூறி, அந்நிறுவனத்துக்கு ஐரோப்பிய ஒன்றியத்தின் தனியுரிமைக் கண்காணிப்புக் குழு, 530 மில்லியன் யூரோ (ரூ. 5.06 லட்சம் கோடி) அபராதம் விதித்தது.

மேலும், 6 மாதங்களுக்குள் விதிகளுக்கு இணங்கவும் உத்தரவிட்டது. 4 ஆண்டுகளாக நடத்தப்பட்டு, அபராதம் விதிக்கப்பட்ட இந்த வழக்கில் மேல்முறையீடு செய்ய டிக்டாக் நிறுவனம் முடிவு செய்துள்ளது.

Advertisement

Advertisement

பாதுகாப்பு காரணங்களுக்காக, இந்தியா மற்றும் அமெரிக்காவில் டிக்டாக் செயலிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.