வான்வழித் தாக்குதல் 
உலகம்

தெற்கு காஸாவில் வான்வழித் தாக்குதல்: 54 பேர் பலி!

கான் யூனிஸ் நகரின் மீது நேற்றிரவு இஸ்ரேல் வான்வழித் தாக்குதல்..

DIN

தெற்கு காஸாவின் கான் யூனிஸ் நகரின் மீது நேற்றிரவு இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் 54 பேர் கொல்லப்பட்டதாக மருத்துவமனை ஒன்று தகவல் தெரிவித்துள்ளது.

இஸ்ரேல் - பாலஸ்தீனம் இடையே கடந்த 2023 அக்டோபர் முதல் போர் நடந்து வருகிறது. இடையில் போர் நிறுத்தம் அவ்வப்போது அறிவிக்கப்பட்டாலும் போர் தொடர்ந்து வருகிறது.

இந்தநிலையில் புதன்கிழமை இரவு நகரில் நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் பலியான ஏராளமான உடல்கள் நகரின் நாசர் மருத்துவமனையில் உள்ள சவக்கிடங்கிற்குக் கொண்டு செல்லப்பட்டதாகவும் கான் யூனிஸில் உள்ள அசோசியேட் பிரஸ் தகவல் தெரிவித்துள்ளது.

இந்தத் தாக்குதலில் பலரின் உடல்கள் துண்டுதுண்டுகளாக சிதையுண்டதாகவும், சிலரின் உடல்கள் பைகளில் அடைத்து கொண்டுவரப்பட்டிருந்ததாகவும் மருத்துவமனை தகவல் தெரிவித்தது. மொத்தம் 54 பேர் கொல்லப்பட்டதாக மருத்துவமனை உறுதிப்படுத்தியது.

வடக்கு மற்றும் தெற்கு காஸாவில் தொடர்ந்து இரண்டாவது நாளாக வான்வழித் தாக்குதல் நடத்தியதில் கிட்டத்தட்ட 24 குழந்தைகள் உள்பட மொத்தம் 70 பேர் கொல்லப்பட்டனர்.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மத்திய கிழக்கு வளைகுடா நாடுகளுக்குச் சென்றதாகவும், ஆனால் இஸ்ரேலுக்கு வருகை தரவில்லை என்றும் இந்த தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

டிரம்பின் இஸ்ரேல் வருகை ஒரு போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கு வழிவகுக்கும், காஸாவிற்கு மனிதாபிமான உதவிகள் கிடைக்கும் என மக்களிடையே பரவலான நம்பிக்கை இருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மின் கம்பியாள் உதவியாளா் தோ்வுக்கு விண்ணப்பிக்கலாம்

பட்டாசுத் தொழில் பிரச்னைகளைகளுக்கு மத்திய, மாநில அரசுகள் தீா்வு காண வேண்டும்: அன்புமணி வலியுறுத்தல்

ஆறுமுகனேரியில் பாஜக சாா்பில் ஓவியப் போட்டி

கோவில்பட்டியில் அதிமுக பூத் கமிட்டி பயிற்சி முகாம்

கடன் பிரச்னை: ஜவுளிக் கடை மேலாளா் விஷம் குடித்து தற்கொலை

SCROLL FOR NEXT