FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
உலகம்

சிரியாவில் பாதுகாப்பு அமைச்சக வாகனத்தின் மீது தாக்குதல்! 3 வீரர்கள் பலி!

சிரியாவின் பாதுகாப்பு அமைச்சக வாகனத்தின் மீதான தாக்குதலில் 3 வீரர்கள் கொல்லப்பட்டது குறித்து...

Updated On : 16 அக்டோபர் 2025, 4:56 pm IST
கோப்புப் படம் - படம் - ஏபி
பகிர்:

சிரியாவின் பாதுகாப்பு அமைச்சகத்தின் பேருந்தின் மீது நடத்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதலில், 3 வீரர்கள் கொல்லப்பட்டதுடன்; 9 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

சிரியாவின் கிழக்கு நகரங்களான தெயிர் எல்-ஸோர் மற்றும் மயாதீன் இடையிலான நெடுஞ்சாலையில், பாதுகாப்பு அமைச்சகத்தின் பேருந்தின் மீது இன்று (அக். 16) வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இந்தத் தாக்குதல் குறித்து தெளிவான தகவல்கள் வெளியாகாத நிலையில், 3 வீரர்கள் கொல்லப்பட்டதுடன், 9 பேர் படுகாயமடைந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

ஈராக் நாட்டுடனான எல்லையில் அமைந்துள்ள எண்ணெய் கிடங்குகளை பாதுகாக்கும் பணியில் ஈடுபட்ட வீரர்களைக் குறிவைத்து இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இதுவரையில், இந்தச் சம்பவத்துக்கு எந்தவொரு அமைப்பும் பொறுப்பேற்காததால், அப்பகுதியில் மறைந்திருந்து செயல்படும் ஐஎஸ் அமைப்பின் சிலீப்பர் செல்களின் தாக்குதலாக இருக்கக் கூடும் எனச் சந்தேகிக்கப்படுகிறது.

முன்னதாக, சிரியா மற்றும் ஈராக் ஆகிய நாடுகளின் பெரும் பகுதிகளைக் கைபற்றியுள்ள ஐ.எஸ். அமைப்பு, சிரியாவின் புதிய இடைக்கால அதிபரான அஹமது அல் - ஷராவின் அரசுக்கு எதிராகச் செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: போர் நிறுத்த விதிகளை ஹமாஸ் மீறினால் இஸ்ரேல் மீண்டும் தாக்குதல் நடத்தும்: டிரம்ப்

summary

A bomb attack on a Syrian Defense Ministry bus has killed three soldiers and seriously injured nine others.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments