உகண்டாவில் விபத்து 
உலகம்

உகண்டாவில் கோர விபத்து: 63 பேர் பலி!

மேற்கு உகண்டாவில் சாலை விபத்து பற்றி..

இணையதளச் செய்திப் பிரிவு

மேற்கு உகண்டாவில் உள்ள நெடுஞ்சாலையில் பேருந்துகள் உள்பட பல்வேறு வாகனங்கள் ஒன்றோடொன்று மோதி விபத்துக்குள்ளானதில் 63 பேர் உயிரிழந்ததுள்ளதாக போலீஸார் தெரிவித்தனர்.

உகாண்டாவின் முக்கிய நகரமான கம்பாலா-குலு நெடுஞ்சாலையில் எதிரெதிர் திசைகளில் சென்ற இரண்டு பேருந்துகள், லாரி மற்றும் கார் ஆகிய 2 வாகனங்களை முந்திச் செல்ல முயன்றபோது இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. இரண்டு பேருந்துகளும் மோதியதில் அதனுடன் பயணித்த சில வாகனங்களும் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்தன.

விபத்தில் காயமடைந்தவர்கள் உகண்டாவின் மேற்கு நகரமான கிரியாண்டோங்கோவில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர். இதனிடையே விபத்து குறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

உகாண்டாவில், 2024 ஆம் ஆண்டில் சாலை விபத்துகளில் 5,144 பேர் கொல்லப்பட்டனர். அதிகாரப்பூர்வ காவல்துறை புள்ளிவிவரங்களின்படி, 2023 இல் 4,806 ஆகவும், 2022 இல் 4,534 ஆகவும் உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

At least 63 people were killed when several vehicles, including buses, collided head-on on a highway in western Uganda.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆந்திரத்தில் தீப்பற்றி எரிந்த ஆம்னி பேருந்து! வெளியான அதிர்ச்சியூட்டும் தகவல்கள்! புகைப்படங்கள்

தமிழ்நாட்டில் அடுத்த வாரம் முதல் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள்! - தேர்தல் ஆணையம்

பொன்னுசாமி எம்எல்ஏ உடலுக்கு துணை முதல்வா் நேரில் அஞ்சலி

பிகாரில் தேர்தல் பிரசாரத்தை தொடங்கினார் மோடி!

6 நாள் ஏற்றத்திற்குப் பிறகு இன்று சரிவில் வர்த்தகமாகும் பங்குச் சந்தை!

SCROLL FOR NEXT