முகப்பு
உலகம்

பிரிட்டன் தலைமையில் ஹோர்முஸ் நீரிணை பாதுகாப்பு உச்சி மாநாடு: 35 நாடுகளிடையே ஒருமித்த முடிவு!

பிரிட்டனில் ஹோர்முஸ் நீரிணை உச்சி மாநாடு: 35 நாடுகளிடையே ஒருமித்த முடிவு!

Updated On : 1 ஏப்ரல், 2026 at 10:38 AM
ஹோர்முஸ் நீரிணையில்
பகிர்:

லண்டன் : பிரிட்டன் தலைமையில் ஹோர்முஸ் நீரிணை பாதுகாப்பு உச்சி மாநாடு நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

பாரசீக வளைகுடா மற்றும் ஓமன் வளைகுடாவுக்கு இடையிலான ஹோா்முஸ் நீரிணையை ஈரான் மூடியுள்ளது. வளைகுடா நாடுகளில் இருந்து எரிசக்தி ஏற்றுமதிக்கு முக்கிய வழித்தடமான ஹோா்முஸ் நீரிணைப் பகுதியில் மொத்தம் 500 கப்பல்கள் சிக்கித் தவிக்கின்றன. அவற்றுள் கச்சா எண்ணெய் மற்றும் திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயுடன் (எல்பிஜி) இந்தியாவுக்கு வர வேண்டிய 19 சரக்கு கப்பல்களும் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நீரிணையைக் கடந்து செல்ல இந்தியா உள்ளிட்ட சில நட்பு நாடுகளின் கப்பல்களுக்கு மட்டும் அனுமதி வழங்கப்படும் என்று ஈரான் தளர்வு அளித்துள்ளது. ஆயினும், தங்கள் நாட்டு அதிகாரிகளுடன் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்றும் ஈரான் வலியுறுத்தியுள்ளது.

பிரிட்டன் முன்னெடுப்பில் சர்வதேச அளவில் தூதரக ரீதியிலான மாநாடு இந்த வாரத்தில் நடத்தப்படும் என்று அந்நாட்டின் பிரதமர் கியர் ஸ்டார்மெர் புதன்கிழமை(ஏப். 1) தெரிவித்தார்.

ஹோர்முஸ் நீரிணை வழித்தடத்தில் கப்பல் போக்குவரத்து பாதுகாப்பை உறுதிசெய்து அவ்வழித்தடம் மீண்டும் இயல்புநிலைக்குத் திரும்ப ஒருங்கிணைந்து செயல்பட 35 நாடுகளிடையே ஒருமித்த முடிவு எடுக்கப்பட்டு ஒப்பந்தம் கையொப்பமாகியுள்ளதாக புதன்கிழமை(ஏப். 1) தெரிவித்த பிரிட்டன் பிரதமர் கியர் ஸ்டார்மெர், பிரிட்டன் முன்னெடுப்பில் சர்வதேச அளவில் தூதரக ரீதியிலான மாநாடு இந்த வாரத்தில் நடத்தப்படும் என்ற அறிவிப்பையும் வெளியிட்டுள்ளார்.

summary

British Prime Minister Keir Starmer on Wednesday said the UK will host an international diplomatic conference this week on ways to reopen the Strait of Hormuz.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.