ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த பிரான்ஸின் சரக்கு கப்பல்! போர்க் காலத்தில் முதல்முறை!
பிரான்ஸ் நாட்டுடன் தொடர்புடைய கப்பல் ஒன்று ஹோர்முஸ் நீரிணையைக் கடந்துள்ளது குறித்து...
பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த நிறுவனத்துக்குச் சொந்தமான கப்பல் ஒன்று ஹோர்முஸ் நீரிணையை வெற்றிகரமாகக் கடந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் கூட்டுத் தாக்குதல்களுக்குப் பதிலடியாக, வளைகுடா நாடுகளின் முக்கிய கட்டமைப்புகள் மீது ஈரானின் படைகள் தாக்குதல் நடத்தி வருகின்றன. மேலும், சர்வதேச எண்ணெய் விநியோகத்தின் முக்கிய வழிப்பாதையான ஹோர்முஸ் நீரிணையை ஈரான் முடக்கியுள்ளது.
இதனைத் தொடர்ந்து, அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் அவர்களின் கூட்டாளிகளுக்குச் சொந்தமான கப்பல்களுக்கு ஹோர்முஸ் நீரிணை வழியாகச் செல்ல அனுமதியில்லை எனவும், அனுமதியின்றி செல்லும் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் எனவும் ஈரான் எச்சரிக்கை விடுத்திருந்தது.
Advertisement
Advertisement
இந்த நிலையில், மால்டா நாட்டின் கொடியுடன் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த சி.எம்.ஏ. சி.ஜி.எம். எனும் நிறுவனத்துக்குச் சொந்தமான சரக்கு கப்பல் ஒன்று வெள்ளிக்கிழமை (ஏப். 3) அன்று ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து ஓமன் நாட்டுக்கு வந்தடைந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்மூலம், போர் தொடங்கியது முதல் ஹோர்முஸ் நீரிணையை பிரான்ஸ் நாட்டுடன் தொடர்புடைய சரக்கு கப்பல் ஒன்று முதல்முறையாகக் கடந்துள்ளது.
இருப்பினும், இதுகுறித்து அந்த நிறுவனத்தின் தரப்பிலிருந்து எந்தவொரு கருத்தும் வெளியாகவில்லை எனக் கூறப்படுகிறது. மேலும், ஹோர்முஸ் நீரிணை முடக்கப்பட்டது முதல் அவ்வழியாகச் செல்லும் கப்பல்களின் போக்குவரத்து 90 சதவிகிதம் குறைந்துள்ளது.
முன்னதாக, ஈரான் மீதான தாக்குதலுக்கு அமெரிக்க போர் விமானங்கள் பிரான்ஸின் வான்வழிப் பாதையைப் பயன்படுத்த அந்நாட்டு அரசு மறுப்பு தெரிவித்துள்ளது. இதனால், பிரான்ஸ் நாட்டுக்குச் சொந்தமான கப்பலை ஹோர்முஸ் நீரிணை வழியாகச் செல்ல ஈரான் அனுமதித்திருக்கக் கூடும் எனக் கருதப்படுகிறது.
It has been reported that a ship owned by a French company has successfully crossed the Strait of Hormuz.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.