ஈரானால் சுட்டு வீழ்த்தப்பட்ட போர் விமானத்தில் இருந்து மாயமான அமெரிக்க வீரர் மீட்பு!
ஈரானால் சுட்டு வீழ்த்தப்பட்ட போர் விமானத்தில் இருந்து மாயமான அமெரிக்கப் படை வீரர் மீட்கப்பட்டுள்ளார்.
ஈரானால் சுட்டு வீழ்த்தப்பட்ட போர் விமானத்தில் இருந்து மாயமான அமெரிக்கப் படை வீரர் மீட்கப்பட்டதாக இரண்டு அமெரிக்க அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனர்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் முன், பெயர் வெளியிட விரும்பாத அந்த அதிகாரிகள் இதனைத் தெரிவித்தனர். தீவிர தேடுதல் மற்றும் மீட்புப் பணிகளுக்குப் பிறகு இந்த மீட்பு நடவடிக்கை நிகழ்ந்துள்ளது.
தென்மேற்கு ஈரானின் வான்வெளியில் பறந்த அமெரிக்காவின் ‘எஃப்-35இ’ போா் விமானம் கடந்த வெள்ளிக்கிழமை, ஈரானால் சுட்டு வீழ்த்தப்பட்டது.
Advertisement
Advertisement
இதையடுத்து அதிலிருந்த வீரர்கள் இருவர் மாயமான நிலையில் ஒருவர் அமெரிக்கப் படைகளால் அண்மையில் மீட்கப்பட்டிருந்தார். விமானத்தில் இருந்த மற்றொரு விமானியைத் தேடும் பணியில் ஈரான், அமெரிக்க படைகள் தீவிரமாக ஈடுபட்டிருந்தன.
மேலும் மாயமான விமானியைக் கண்டுபிடிப்பவருக்கு ஈரான் சிறப்பு வெகுமதியும் அறிவித்தது.
இதனிடையே மாயமான விமானியை மீட்பதற்காகச் சென்ற அமெரிக்காவின் ‘பிளாக் ஹாக்’ ரக ஹெலிகாப்டா்களையும் ஈரான் தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.
A US service member who has been missing since Iran shot down a fighter jet has been rescued, two US officials said on Sunday.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.