ஈரான் கப்பலைச் சிறைபிடித்த அமெரிக்கா! போர்நிறுத்தம் தொடருமா?
ஹோர்முஸ் நீரிணை அருகே ஈரான் சரக்குக் கப்பல் மீது தாக்குதல் நடத்தி அதனை அமெரிக்கா கைப்பற்றியுள்ளது.
ஹோர்முஸ் நீரிணை அருகே ஈரான் சரக்குக் கப்பல் மீது தாக்குதல் நடத்தி அதனை அமெரிக்கா கைப்பற்றியுள்ளது.
ஹோர்முஸ் நீரிணை அருகே ஈரான் கொடியுடன் வந்த சரக்குக் கப்பல் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தி அதனைச் சிறை பிடித்ததைத் தொடர்ந்து, அமெரிக்காவுக்கு ஈரானுக்கு இடையே மேற்கொள்ளப்பட்ட போர்நிறுத்தம் ரத்தாகும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால், இரு நாடுகளுக்கிடையே மோதல் மீண்டும் தீவிரமடையும் நிலை உருவாகியுள்ளது.
ஈரான் துறைமுகங்கள் மீதான முற்றுகை நடவடிக்கையின் தொடர்ச்சியாக அமெரிக்கப் போர்க்கப்பலின் எச்சரிக்கைகளைப் புறக்கணித்த ஈரானின் 'டௌஸ்கா' என்ற கப்பல் ஓமன் ஹோர்முஸ் நீரிணையில் வழிமறிக்கப்பட்டதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்தார். அந்தக் கப்பல் தாக்கப்படும் விடியோ காட்சிகளை அமெரிக்க ராணுவம் வெளியிட்டுள்ளது.
Advertisement
இந்தத் தாக்குதலை ’கடல் கொள்ளை’ என்றும், போர்நிறுத்த விதிமீறல் என்றும் ஈரான் தெரிவித்துள்ளது. இதற்கு விரைவில் பதிலடி கொடுக்கப்படும் என்றும் ஈரான் எச்சரிக்கை விடுத்துள்ளது.
வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராச்சி, ஈரான் கப்பல்கள் மற்றும் துறைமுகங்களுக்கு எதிரான அமெரிக்காவின் அச்சுறுத்தல் நடவடிக்கைகள் அவர்களின் மோசமான நோக்கங்களையும், போர்நிறுத்தத்தில் அக்கறையின்மையையும் காட்டுவதாகத் பாகிஸ்தானின் உயர்மட்ட தூதரிடம் தெரிவித்தார்.
போர்நிறுத்தம் தொடர்பான காலக்கெடு நெருங்கி வரும் நிலையில், இரு நாடுகளும் தங்களின் நிலைப்பாட்டை கடுமையாக்கி வருகின்றனர். போர்நிறுத்தம் தொடர்பாக வரும் நாட்களில் மீண்டும் பேச்சுவார்த்தைகள் நடைபெறுமா அல்லது போர் மீண்டும் தொடருமா என்பது தற்போதைய மோதல் தொடர்பாக இரு நாடுகளும் அளிக்கும் பதில்களை பொறுத்தே அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.