எச்-1பி விசாவுக்கு 3 ஆண்டுகள் தடை? டிரம்ப் அரசு புதிய மசோதா!
எச்-1பி விசாவுக்கு 3 ஆண்டுகள் தடை விதிக்கும் வகையில் டிரம்ப் அரசு புதிய மசோதா தாக்கல்
அமெரிக்காவில், எச்-1பி விசாவுக்கு மூன்று ஆண்டுகள் வரை தடை விதிக்கும் வகையில், டிரம்ப் கட்சியான குடியரசுக்கட்சி சார்பில் ஒரு புதிய மசோதா அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
ஆண்டுக்கு 65 ஆயிரம் எச்-1பி விசா வழங்கப்படும் என்ற அளவை 25 ஆயிரமாகக் குறைக்கவும், விதிவிலக்குகளை முற்றிலும் நீக்கவும் வலியுறுத்தி இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்டிருப்பது இந்தியர்கள் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
அமெரிக்க தொழிலாளர்களுக்கு பெரும் பாதமாக இருக்கும் எச்-1பி விசா வழங்குவதை மூன்று ஆண்டுகளுக்கு நிறுத்தி வைக்க வேண்டும் என்று வலியுறுத்தி குடியரசுக் கட்சி உறுப்பினர்கள் குழு இந்த மசோதாவை தாக்கல் செய்திருக்கிறது. எச்-1பி விசா நிறுத்தச் சட்டம் 2026 என்ற மசோதாவில், விசா முறையை மீண்டும் தொடங்குவதற்கு முன்பு, கடுமையான விதிமுறைகளை ஏற்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தியிருக்கிறது.
Advertisement
அமெரிக்க அரசு, கடுமையாக பணியாற்றும் தன்னுடைய குடிமக்களுக்காக வேலை செய்யவேண்டும், தவிர்த்து மிகப்பெரிய நிறுவனங்களின் லாபத்துக்காக வேலை செய்யக் கூடாது, எச்-1பி விசா காரணமாக அமெரிக்க மக்கள் பாதிக்கப்படுவதை தடுக்க வேண்டும், அமெரிக்க தொழிலாளர்கள் செய்ய தகுதியுடைய வேலைகளைக்கூட அவர்கள் செய்ய விடாமல் தடுப்பது போன்றவற்றிலிருந்து இந்த மசோதா காக்கும் என்று கூறுகிறார்கள்.
மற்ற குடியரசுக் கட்சி உறுப்பினர்களிடமும் இந்த மசோதாவுக்கு ஆதரவு அளிக்குமாறு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
எச்-1பி விசா முறை, நமது சொந்த நாட்டு மக்களுக்கு எதிரானது என்றும், முதலில் நம் நாட்டு மக்களுக்கு வேலை கொடுங்கள் என்றும் இதனைக் கொண்டு வந்த பேசிய குடியரசுக் கட்சி உறுப்பினர் கோசர் வலியுறுத்தினார்.
அமெரிக்கர்களையே, சொந்த நாட்டில், வெளிநாட்டினரைப் போல பார்க்கப்படுவதை ஏற்க முடியாது என்றும் அவர்கள் குறிப்பிட்டனர்.