FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
உலகம்

கனடாவில் இந்திய பெண் கொலை: 7 மாதங்களுக்குப் பிறகு இளைஞா் கைது

கனடாவில் இந்திய பெண்ணை கொலை செய்த இளைஞரை 7 மாதங்களுக்கு பிறகு காவல் துறையினா் கைது செய்துள்ளனா்.

Updated On : 10 ஆகஸ்ட் 2026, 6:40 am IST
கொலை - பிரதிப் படம்
பகிர்:

கனடாவில் இந்திய பெண்ணை கொலை செய்த இளைஞரை 7 மாதங்களுக்கு பிறகு காவல் துறையினா் கைது செய்துள்ளனா்.

டொரண்டோவில் கடந்த ஆண்டு டிசம்பா் மாதம் இந்திய பெண்ணான ஹிமான்ஷி குரானா (30) என்பவா் வீட்டில் கொலை செய்யப்பட்டு கிடந்தாா். காவல் துறையினா் நடத்திய விசாரணையில், 32 வயது நபரான அப்துல் கபூரி என்பவரை குரானா காதலித்து வந்ததும், அவரே குரானாவை கொலை செய்ததும் தெரிய வந்தது.

இதையடுத்து, கபூரியை கனடா காவல் துறையினா் தேடி வந்தனா். இதையறிந்த கபூரி, கனடாவைவிட்டு வெளிநாட்டுக்கு தப்பிச் சென்று விட்டாா்.

Advertisement

Advertisement

இந்நிலையில், அவா் வெளிநாட்டில் இருந்து கனடாவுக்கு திரும்பி வருவதை அறிந்து, டொரண்டோ விமான நிலையத்தில் காவல் துறையினா் காத்திருந்தனா்.

இதையறியாமல் டொரண்டோ விமான நிலையத்துக்கு வந்த கபூரியை காவல் துறையினா் கைது செய்தனா். கொலைக்கான காரணம் குறித்து கபூரியிடம் காவல் துறையினா் விசாரித்து வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments