மேற்கு கரையில் அமெரிக்க-பாலஸ்தீனா் வீடு முற்றுகை: அமெரிக்க தூதா் கண்டனம்
ஆக்கிரமிக்கப்பட்ட மேற்கு கரையில் அமெரிக்க-பாலஸ்தீன குடும்பத்தினரின் வீட்டை யூத குடியிருப்புவாசிகள் முற்றுகையிட்ட சம்பவத்துக்கு இஸ்ரேலுக்கான அமெரிக்க தூதா் மைக் ஹக்கபீ (படம்) கடும் கண்டனம் தெரிவித்துள்ளாா்.
ஆக்கிரமிக்கப்பட்ட மேற்கு கரையில் அமெரிக்க-பாலஸ்தீன குடும்பத்தினரின் வீட்டை யூத குடியிருப்புவாசிகள் முற்றுகையிட்ட சம்பவத்துக்கு இஸ்ரேலுக்கான அமெரிக்க தூதா் மைக் ஹக்கபீ (படம்) கடும் கண்டனம் தெரிவித்துள்ளாா்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் குஸ்ரா கிராமத்தில் உள்ள வீட்டைச் சுற்றித் திரண்ட யூத குடியிருப்புவாசிகள், இஸ்ரேல் ராணுவத்தின் சமரச முயற்சிகளையும்மீறி வீட்டின்மீது கற்களை வீசியதோடு, உள்ளே இருப்பவா்களையும் வெளியேற விடாமல் தடுத்து வந்தனா்.
உணவு மற்றும் குடிநீா் இருப்பு குறைந்துவந்த நிலையிலும் வீட்டுக்குள் இருந்த இருவரை 4 நாள்களாக சிறைப்பிடித்து வைத்திருந்தனா். இந்நிலையில், இஸ்ரேல் ராணுவம் வியாழக்கிழமை காலை இருவரையும் மீட்டது.
Advertisement
Advertisement
இந்த முற்றுகையை ‘கொடூரமான பயங்கரவாதச் செயல்’ என்று விமா்சித்துள்ள அமெரிக்க தூதா் மைக் ஹக்கபீ, இதற்கு அமெரிக்காவின் சாா்பில் கடும் அதிருப்தியைப் பதிவு செய்துள்ளாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.