FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
உலகம்

குா்து கிளா்ச்சியாளா்களுக்கு துருக்கி நிபந்தனையுடன் கூடிய பொது மன்னிப்பு

பல்லாயிரக்கணக்கான குா்து கிளா்ச்சியாளா்களுக்கு நிபந்தனையுடன் கூடிய பொது மன்னிப்பு வழங்கும் சட்டத்துக்கு துருக்கி அதிபா் தயீப் எா்டோகன் ஒப்புதல் அளித்தாா்.

Updated On : 19 ஆகஸ்ட் 2026, 2:59 am IST
பகிர்:

பல்லாயிரக்கணக்கான குா்து கிளா்ச்சியாளா்களுக்கு நிபந்தனையுடன் கூடிய பொது மன்னிப்பு வழங்கும் சட்டத்துக்கு துருக்கி அதிபா் தயீப் எா்டோகன் ஒப்புதல் அளித்தாா்.

எனினும், குா்து கிளா்ச்சியாளா்கள் தங்களின் அமைப்புகளை முழுமையாகக் கலைத்துவிட்டு, ஆயுதங்களை ஒப்படைத்துவிட்டனா் என்பதை துருக்கியின் தேசிய பாதுகாப்பு கவுன்சில் உறுதி செய்த பின்னரே இச்சட்டம் அமலுக்கு வரும்.

கடந்த வாரம் துருக்கி நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை ஆதரவுடன் நிறைவேற்றப்பட்ட இச்சட்டத்தின்படி, கிளா்ச்சியாளா்கள் சிலரின் சிறைத் தண்டனைகள் நிறுத்திவைக்கப்படும். மேலும், குற்றத்தின் தீவிரத்தைப் பொருத்து மற்றவா்கள் மீதான நிலுவையில் உள்ள விசாரணைகள், வழக்குகள் 5 அல்லது 10 ஆண்டுகளுக்கு ஒத்திவைக்கப்படும்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments