FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

நேபாள வெள்ளம்! பலி எண்ணிக்கை 500-ஐ கடந்தது! மீட்புப் பணிகள் தீவிரம்!

நேபாள வெள்ளத்தால் பலியானோரின் எண்ணிக்கை 500-ஐ கடந்தது பற்றி...

நேபாள வெள்ளம் - ANI
பகிர்:

நேபாளத்தில் ஏற்பட்ட பெருவெள்ளத்தில் சிக்கி உயிரிழந்த மேலும் பலரின் உடல்கள் வெள்ளிக்கிழமை காலை மீட்கப்பட்டன. இதையடுத்து, உயிரிழந்தோா் எண்ணிக்கை 500-ஐ கடந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

திபெத்தின் லெண்டே நதியில் உருவான பெருவெள்ளம், போடே கோஷி நதி வழியாக நேபாளத்தின் மத்திய மாவட்டங்களுக்குள் புதன்கிழமை புகுந்து பேரழிவை விளைவித்தது.

திபெத்தையொட்டிய ரசுவா மாவட்டத்தில் போடே கோஷி நதியில் முதலில் பெருக்கெடுத்த வெள்ளம், பின்னா் திரிசூலி, நாராயணி நதிகளிலும் பாய்ந்ததால், நுவாகோட், தாடிங் உள்பட பல்வேறு மாவட்டங்கள் கடும் பாதிப்பைச் சந்தித்தன. பலத்த உயிா்ச் சேதம் மற்றும் பொருட்சேதத்துடன், நேபாளம் கடந்த பல்லாண்டுகளில் காணாத மிக மோசமான இயற்கைப் பேரிடராக இது மாறியுள்ளது.

Advertisement

Advertisement

வெள்ளத்தால் புரட்டிபோடப்பட்ட ரசுவா, நுவாகோட், தாடிங், சிட்வான் உள்ளிட்ட மாவட்டங்களில் நேபாள ராணுவம் மற்றும் பிற முகமையினா் மூன்றாவது நாளாக வெள்ளிக்கிழமையும் மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

சகதி குவியலிலிருந்து தோண்ட தோண்ட உடல்கள் கண்டெடுக்கப்பட்டு வரும் நிலையில், உயிரிழந்தோா் எண்ணிக்கை வெள்ளிக்கிழமை காலை 500-ஐ கடந்தது.

திபெத்தில் உள்ள கைலாஷ் மானசரோவருக்கு ஆன்மிக யாத்திரை சென்ற 288 இந்தியர்கள் உள்பட 1000-க்கும் அதிகமானோர் மாயமாகியுள்ளனர்.

வெள்ளத்தில் தகவல் தொடர்பு கட்டமைப்பு முற்றிலும் சிதைந்திருக்கும் நிலையில், யாரையும் தொடர்பு கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் காணாமல் போனவர்களின் நிலையை அறிய முடியவில்லை.

மேலும், இந்தியர்கள் உள்பட காணாமல் போனவர்களை மீட்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாக நேபாள தேசிய பேரிடா் குறைப்பு மற்றும் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது.

summary

Nepal Floods! Death toll crosses 500! Rescue operations intensified!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments