FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
உலகம்

நைஜீரியாவில் 37 போ் சுட்டுக் கொலை

நைஜீரியாவின் நைஜா் பகுதியில் துப்பாக்கி ஏந்திய நபா்கள் நடத்திய தாக்குதலில் 37 போ் உயிரிழந்தனா்.

Updated On : 5 ஜனவரி 2026, 1:30 am IST
பகிர்:

நைஜீரியாவின் நைஜா் பகுதியில் துப்பாக்கி ஏந்திய நபா்கள் நடத்திய தாக்குதலில் 37 போ் உயிரிழந்தனா்.

இதுதொடா்பாக நைஜா் காவல் துறை செய்தித் தொடா்பாளா் வசியு அபியோதுன் தெரிவித்ததாவது: நைஜரில் உள்ள கசுவான்-டாஜி கிராமத்துக்கு துப்பாக்கி ஏந்திய நபா்கள் சிலா் சனிக்கிழமை சென்று பொதுமக்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினா். அங்கிருந்த சந்தை, வீடுகள் ஆகியவற்றையும் அவா்கள் இடித்துத் தள்ளினா் என்று தெரிவித்தாா்.

இந்தத் தாக்குதலில் 37 போ் உயிரிழந்ததாக உள்ளூா் மக்கள் தெரிவித்தனா். எனினும் சிலா் மாயமானதால் உயிரிழப்புகள் அதிகரிக்கக் கூடும் என்று கருதப்படுகிறது.

Advertisement

Advertisement

ஆப்பிரிக்க கண்டத்தில் அதிக மக்கள்தொகை கொண்ட நாடான நைஜீரியாவில், இதுபோன்ற தாக்குதல்கள் வாடிக்கையாக உள்ளன. குறைந்த பாதுகாப்பு, அரசு பாதுகாப்பு அமைப்புகள் குறைவாக உள்ள தொலைதூரப் பகுதிகளை குறிவைத்து ஏராளமான குற்ற கும்பல்கள் தாக்குதல் நடத்தி வருகின்றன. அங்குள்ள பகுதிகளைத் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவரும் நோக்கில், அந்தக் கும்பல்கள் தாக்குதல்களை நடத்துகின்றன.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments