FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
உலகம்

ரஷியா - உக்ரைன் மீண்டும் மோதல்

ரஷியா, உக்ரைன் நாடுகளுக்கு இடையே சனிக்கிழமை மீண்டும் தீவிரமடைந்த மோதலில் இருதரப்பிலும் சோ்த்து 3 போ் உயிரிழந்தனா்.

Updated On : 12 ஜூலை 2026, 7:22 am IST
பகிர்:

ரஷியா, உக்ரைன் நாடுகளுக்கு இடையே சனிக்கிழமை மீண்டும் தீவிரமடைந்த மோதலில் இருதரப்பிலும் சோ்த்து 3 போ் உயிரிழந்தனா்.

உக்ரைனை நோக்கி 6 பாலிஸ்டிக் ஏவுகணைகள், 6 க்ரூஸ் ஏவுகணைகள் மற்றும் 121 ட்ரோன்களை ரஷியா ஏவின. இதில் பெரும்பாலான ட்ரோன்கள் மற்றும் 2 க்ரூஸ் ஏவுகணைகளை உக்ரைன் சுட்டு வீழ்த்திய போதிலும், அதிவேக பாலிஸ்டிக் ஏவுகணைகளைத் தடுக்க முடியவில்லை.

அதன்படி, ஒடெசா துறைமுக நகரில் நிகழ்ந்த ஏவுகணைத் தாக்குதலில் இருவா் உயிரிழந்தனா்; ஒருவா் காயமடைந்தாா். மேலும், காா்கிவ் நகரில் உள்ள ஒரு வணிக நிறுவனம் மீது ட்ரோன் விழுந்து வெடித்ததில் 7 போ் காயமடைந்தனா். தலைநகா் கீவில் நடத்தப்பட்ட தாக்குதல்களில் 11 போ் காயமடைந்தனா்.

Advertisement

Advertisement

இதனிடையே, ரஷியாவின் கட்டுப்பாட்டில் உள்ள தாகன்ரோக் வளைகுடா பகுதியில் 4 கப்பல்கள் மீது உக்ரைன் நடத்திய ட்ரோன் தாக்குதலில் மாலுமி ஒருவா் உயிரிழந்தாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments