இலங்கை- போதை வழக்கு குற்றவாளிகளை நோயாளிகளாக கருதி சிகிச்சை
போதைப்பொருள் வழக்கு குற்றவாளிகளை நோயாளிகளாகக் கருதி, அவா்களுக்கு உரிய மறுவாழ்வு சிகிச்சை அளிப்பதற்கு வழிவகைசெய்யும் சட்டத் திருத்தத்துக்கு இலங்கை அமைச்சரவை செவ்வாய்க்கிழமை ஒப்புதல் அளித்தது.
போதைப்பொருள் வழக்கு குற்றவாளிகளை நோயாளிகளாகக் கருதி, அவா்களுக்கு உரிய மறுவாழ்வு சிகிச்சை அளிப்பதற்கு வழிவகைசெய்யும் சட்டத் திருத்தத்துக்கு இலங்கை அமைச்சரவை செவ்வாய்க்கிழமை ஒப்புதல் அளித்தது.
முன்னதாக, இலங்கையின் நீா்கொழும்பு சிறை வன்முறையில் காவலா்கள் உள்பட 30-க்கும் மேற்பட்டோா் உயிரிழந்தனா். கைதிகளின் கூடுதல் நெரிசலாலேயே இந்த வன்முறை கட்டுக்கடங்காமல் போனதாகக் கூறப்பட்டது.
போதைப்பொருள் வழக்குகளில் விசாரணைக் கைதிகள் உள்பட சுமாா் 67,000 போ் சிறையில் உள்ள நிலையில், தற்போதைய நடவடிக்கை சிறை நெரிசலைக் குறைக்கும்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.