முகப்பு
உலகம்

ஈரான் போர்! குவைத் மீதான தாக்குதலில் 61 வீரர்கள் படுகாயம்!

ஈரானின் தாக்குதல்களில் 61 குவைத் ராணுவ வீரர்கள் படுகாயமடைந்துள்ளது குறித்து...

Updated On : 6 மார்ச் 2026, 4:18 pm IST
மத்திய கிழக்கு நாடுகள் மீதான தாக்குதல்களில் கொல்லப்பட்ட 13 பேரில் 8 பேர் குவைத் நாட்டைச் சேர்ந்தவர்கள்... - AP
பகிர்:

எஈரானின் தாக்குதல்களில், குவைத் நாட்டின் ராணுவ வீரர்கள் 61 பேர் படுகாயமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் தாக்குதல்களைத் தொடர்ந்து, மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவத் தளங்கள் மற்றும் கட்டமைப்புகள் மீது ஈரானின் படைகள் தாக்குதல் நடத்தி வருகின்றன.

இதில், மத்திய கிழக்கில் உள்ள குவைத், பஹ்ரைன், ஐக்கிய அரபு அமீரகம், கத்தார், சௌதி அரேபியா போன்ற நாடுகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.

Advertisement

Advertisement

இந்த நிலையில், அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் தளங்களைக் குறிவைத்து ஈரான் நடத்தி வரும் தாக்குதல்களால் இதுவரை 67 குவைத் ராணுவ வீரர்கள் படுகாயமடைந்துள்ளதாக, அந்நாட்டின் பாதுகாப்பு அமைச்சகம் வெள்ளிக்கிழமை (மார்ச் 6) அறிவித்துள்ளது.

மேலும், கடந்த பிப். 28 முதல் நடைபெற்று வரும் இந்தப் போரினால் வளைகுடா நாடுகளின் பலி எண்ணிக்கை 13 ஆக உயர்ந்துள்ள நிலையில்; அதில் அதிகப்படியாக குவைத் நாட்டில் 8 பேர் கொல்லப்பட்டது தெரியவந்துள்ளது.

முன்னதாக, குவைத் நாட்டில் ஏராளமான அமெரிக்க ராணுவத் தளங்கள் உள்ளதால், அந்நாட்டின் மீது கடந்த பிப். 28 முதல் 212 பாலிஸ்டிக் ஏவுகணைகள் மற்றும் 394 ட்ரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டதாகக் கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.

summary

61 Kuwaiti soldiers have been seriously injured in Iran's attacks.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.