ஈரான் போர்! குவைத் மீதான தாக்குதலில் 61 வீரர்கள் படுகாயம்!
ஈரானின் தாக்குதல்களில் 61 குவைத் ராணுவ வீரர்கள் படுகாயமடைந்துள்ளது குறித்து...
எஈரானின் தாக்குதல்களில், குவைத் நாட்டின் ராணுவ வீரர்கள் 61 பேர் படுகாயமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் தாக்குதல்களைத் தொடர்ந்து, மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவத் தளங்கள் மற்றும் கட்டமைப்புகள் மீது ஈரானின் படைகள் தாக்குதல் நடத்தி வருகின்றன.
இதில், மத்திய கிழக்கில் உள்ள குவைத், பஹ்ரைன், ஐக்கிய அரபு அமீரகம், கத்தார், சௌதி அரேபியா போன்ற நாடுகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.
Advertisement
Advertisement
இந்த நிலையில், அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் தளங்களைக் குறிவைத்து ஈரான் நடத்தி வரும் தாக்குதல்களால் இதுவரை 67 குவைத் ராணுவ வீரர்கள் படுகாயமடைந்துள்ளதாக, அந்நாட்டின் பாதுகாப்பு அமைச்சகம் வெள்ளிக்கிழமை (மார்ச் 6) அறிவித்துள்ளது.
மேலும், கடந்த பிப். 28 முதல் நடைபெற்று வரும் இந்தப் போரினால் வளைகுடா நாடுகளின் பலி எண்ணிக்கை 13 ஆக உயர்ந்துள்ள நிலையில்; அதில் அதிகப்படியாக குவைத் நாட்டில் 8 பேர் கொல்லப்பட்டது தெரியவந்துள்ளது.
முன்னதாக, குவைத் நாட்டில் ஏராளமான அமெரிக்க ராணுவத் தளங்கள் உள்ளதால், அந்நாட்டின் மீது கடந்த பிப். 28 முதல் 212 பாலிஸ்டிக் ஏவுகணைகள் மற்றும் 394 ட்ரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டதாகக் கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.
61 Kuwaiti soldiers have been seriously injured in Iran's attacks.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.