உக்ரைனுக்கு வழங்கிய பணத்தை ஐரோப்பியர்களிடம் கேட்போம்! - அதிபர் டிரம்ப் பேச்சு!
உக்ரைனுக்கு அமெரிக்கா வழங்கிய நிதியை ஐரோப்பிய நாடுகளிடம் கேட்கப்போவதாக அதிபர் டிரம்ப் பேச்சு...
உக்ரைனுக்கு அமெரிக்கா சார்பில் வழங்கப்பட்ட நிதியுதவியை திருப்பிச் செலுத்துமாறு ஐரோப்பிய நாடுகளிடம் கேட்கப்போவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளார்.
ரஷியா உடனான உக்ரைனின் போரைத் தொடர்ந்து, அமெரிக்க முன்னாள் அதிபர் ஜோ பைடனின் ஆட்சிக்காலத்தில் உக்ரைனுக்கு கோடிக்கணக்கான டாலர் நிதியுதவி அளிக்கப்பட்டன. இதைத் தற்போதைய அதிபர் டிரம்ப் தொடர்ந்து விமர்சித்து வரும் நிலையில், இந்த விவகாரத்தில் ஐரோப்பியர்கள் பெரும் பங்கெடுக்க வேண்டுமெனவும் வலியுறுத்தி வருகிறார்.
இந்த நிலையில், உக்ரைனுக்கு அமெரிக்க அரசு வழங்கிய நிதியுதவியைத் திருப்பிச் செலுத்துமாறு ஐரோப்பிய நாடுகளிடம் கேட்கப்போவதாக, அதிபர் டிரம்ப் கூறியுள்ளது பெரும் அதிர்வலைகளை உருவாக்கியுள்ளது.
Advertisement
Advertisement
இதுபற்றி, வியாழக்கிழமை (செப். 3) அவர் வெளியிட்டுள்ள சமூக ஊடகப் பதிவில்,
“நூற்றுக்கணக்கான பில்லியன் டாலர்கள், உக்ரைன் மற்றும் நேட்டோ அமைப்புக்கு இலவசமாக வழங்கப்பட்டன. ஐரோப்பாவிடம் கேட்டிருந்தார் அவர்களே அந்தத் தொகையைச் செலுத்தியிருப்பார்கள். ஆனால், சற்று தாமதமாகவேனும் அந்தப் பணத்தை நாங்கள் திரும்பக் கேட்போம்” எனக் கூறியுள்ளார்.
இந்தப் பதிவில், எந்தெந்த நாடுகள் இதில் அடங்கும் என அவர் குறிப்பிடாத நிலையில், இந்த விவகாரம் இணையவாசிகள் இடையே பெரும் பேசுபொருளாகியுள்ளது.
Trump has stated that he intends to ask Europeans to repay the financial aid provided to Ukraine on behalf of the United States.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.