நடிகர் அசோக் செல்வன் ‘நாய்’ என குறிப்பிட்டது இந்த விமர்சகரையா?

நடிகர் அசோக் செல்வனுக்கும் விமர்சகர் ப்ளூ சட்டை மாறனுக்கும் ட்விட்டரில் கருத்து மோதல். 
நடிகர் அசோக் செல்வன் ‘நாய்’ என குறிப்பிட்டது இந்த விமர்சகரையா?
Published on
Updated on
1 min read

சூது கவ்வும் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் அசோக் செல்வன். தெகிடி, ஓ மை கடவுளே போன்ற வெற்றி படங்களில் நடித்தவர். தற்போது இவர் நடிப்பில் இந்தாண்டு பல படங்கள் வெளியானது. சில நேரங்களில் சில மனிதர்கள், மன்மத லீலை, ஹாஸ்டல், வேழம், நித்தம் ஒரு வானம். எஸ்டேட் படத்திலும் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார். 

பிரபல யூடியூப் விமர்சகர் ப்ளூசட்டை மாறன் ‘ஆண்டி இந்தியன்’ படத்தினை இயக்கியுள்ளார். அவர் நேற்று தனது ட்விட்டர் பக்கத்தில் இந்தாண்டு 5 தோல்வி படங்களை தந்தவர் அசோக் செல்வன் என குறிப்பிட்டு இருந்தார். 

இதன் பதிலடியாக நடிகர் அசோக் செல்வன், “குரைக்கின்ற நாய்கள் குரைக்கட்டும். முன்னேறி செல்வோம். தானாக உருவானவன்” என புகைப்படத்தினை பதிவிட்டு இருந்தார். ரசிகர்கள் அசோக் செல்வனுக்கு ஆதரவாக கமெண்ட் செய்து வருகின்றனர். 

பின்னர் இந்த பதிவுக்கு எதிரொலியாக ப்ளூசட்டை மாறன், “ ட்வீட்டுகளின் மூலமாக குறைப்பது சரியில்லை தம்பி. தயாரிப்பாளர்களின் பணத்தை வீணாக்க வேண்டாம். ஒரே வருடத்தில் 5 தோல்வி படங்களை தருவது மிகப்பெரிய சாதனைதான். வேறு எந்த நடிகர்களாலும் இதை செய்ய முடியாது. உங்களது திறமையை வளர்த்துக் கொள்ளுங்கள். படங்களின் தரம் முக்கியம். எண்ணிக்கை முக்கியமல்ல. பிஸ்கட்டுக்கு மகிழ்ந்திரு” என பதிவிட்டுள்ளார். இந்தப் பதிவின் கீழ் விமர்சகர் ப்ளுசட்டை மாறனை ரசிகர்கள் கடுமையாக கிண்டலடித்து வருகின்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com