மனைவியை அடித்த விவகாரம்: மக்களிடம் மன்னிப்பு கேட்டார் நடிகர் தர்ஷன்
பெங்களூர், அக். 8: மனைவியை அடித்து சர்ச்சையில் சிக்கிய கன்னட நடிகர் தர்ஷன் அவரது ரசிகர்களிடமும், மக்களிடமும் சனிக்கிழமை மன்னிப்பு கோரினார். மனைவி விஜயலட்சுமியை மூர்க்கத்தனமாக அடித்த சம்பவம் தொடர்பாக
பெங்களூர், அக். 8: மனைவியை அடித்து சர்ச்சையில் சிக்கிய கன்னட நடிகர் தர்ஷன் அவரது ரசிகர்களிடமும், மக்களிடமும் சனிக்கிழமை மன்னிப்பு கோரினார்.
மனைவி விஜயலட்சுமியை மூர்க்கத்தனமாக அடித்த சம்பவம் தொடர்பாக கடந்த 28 நாள்கள் சிறையில் அடைக்கப்பட்டிருந்த தர்ஷன், உயர்நீதிமன்றம் ஜாமீன் அளித்ததை அடுத்து, வெள்ளிக்கிழமை மாலை சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டார்.
இந்நிலையில், பெங்களூர், ராஜராஜேஸ்வரி நகரிலுள்ள அவரது வீட்டின் முன்பு தன்னைக்காணத் திரண்டிருந்த ரசிகர்களிடையே அவர் பேசியது:
Advertisement
Advertisement
எனது மனைவி விஜயலட்சுமியைத் அடித்ததற்காக எனது ரசிகர்கள் மற்றும் கர்நாடக மக்களிடம் பகிரங்கமாக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். இப்போது எங்கள் இருவருக்கும் இடையே எவ்வித பிரச்னையும் இல்லை. இனிமேல் மனைவியை நன்றாக கவனித்து கொள்வேன். இக்கட்டான காலகட்டத்தில் எனக்கு ஆதரவாக இருந்த ரசிகர்களுக்கு நன்றி என்றார்.
தர்ஷனைக் காண ரசிகர்கள் முண்டியடித்து ஓடியதால் அவரது வீட்டுச் சுவர் இடிந்தது. இதில் 3 பேர் காயமடைந்தனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.