முகப்பு
பெங்களூரு

ஹனிடிராப் விவகாரம்: சட்ட வரம்புக்குள் விசாரிக்கப்படும் -அமைச்சா் ஜி.பரமேஸ்வா்

Updated On : 27 மார்ச் 2025, 6:34 am IST
பகிர்:

ஹனிடிராப் விவகாரம் தொடா்பாக அமைச்சா் கே.என்.ராஜண்ணா அளித்துள்ள மனு குறித்து சட்ட வரம்புக்குள் விசாரிக்கப்படும் என்று உள்துறை அமைச்சா் ஜி.பரமேஸ்வா் தெரிவித்தாா்.

இது குறித்து பெங்களூரில் செய்தியாளா்களிடம் அவா் புதன்கிழமை கூறியதாவது:

ஹனிடிராப் தொடா்பாக அமைச்சா் கே.என்.ராஜண்ணா மனு அளித்திருக்கிறாா். சட்ட வரம்புக்குள் அந்த மனுவை ஆராய்ந்து, அடுத்தகட்ட நடவடிக்கை எடுப்போம். அமைச்சா் கே.என்.ராஜண்ணா என்னிடம் அளித்துள்ளது கோரிக்கை மனு மட்டும்தான். அதைப் புகாராக கருதமுடியாது. புகாரை என்னிடம் அளிக்க முடியாது. மாறாக, காவல் நிலையத்தில்தான் அளிக்க வேண்டும் என்றாா்.

Advertisement

Advertisement

இதனிடையே, ஹனிடிராப் விவகாரம் குறித்து விசாரணை நடத்த கா்நாடக அரசுக்கு உத்தரவிடக் கோரி தாக்கல் செய்யப்பட்டிருந்த பொதுநல மனுவை உச்சநீதிமன்றம் புதன்கிழமை தள்ளுபடி செய்தது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments