பெங்களூரில் கழிவு மேலாண்மை டெண்டரில் ரூ. 39,000 கோடி முறைகேடு: ஆளுநரிடம் பாஜக புகார்
பெங்களூரில் கழிவு மேலாண்மை டெண்டர் விடப்பட்டதில் ரூ. 39,000 கோடி முறைகேடு: காங்கிரஸ் அரசு மீது குற்றச்சாட்டு
பெங்களூரு : பெங்களூரில் கழிவு மேலாண்மை டெண்டரில் ரூ. 39,000 கோடி முறைகேட்டில் கர்நாடக ஆளுங்கட்சியான காங்கிரஸ் தலைமையிலான அரசு ஈடுபட்டதாக பாஜக குற்றச்சாட்டு சுமத்தியுள்ளது.
இந்த முறைகேட்டின் பயனாக காங்கிரஸ் அரசுக்கு தனியார் ஒப்பந்ததாரர் தரப்பிலிருந்து ரூ. 10,000 கோடி கிடைத்திருப்பதாகவும் பாஜக சுமத்தியுள்ள குற்றச்சாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக, கர்நாடக ஆளுநரிடம் அம்மாநில எதிர்க்கட்சித் தலைவர் ஆர். அசோகா புகார் அளித்துள்ளார். அதில், கழிவுகள் மேலாண்மை டெண்டரில் நடைபெற்ற முறைகேடுகள் பற்றி விசாரணை கோரியுள்ளார். இதற்கான டெண்டர் குறிப்பிட்டதொரு தனியார் ஒப்பந்ததாரரிடம் மட்டுமே அடுத்த 35 ஆண்டுகளுக்கு அளிக்கப்பட்டதாகவும் அதிலும் அரசுக்கு இழப்பை ஏற்படுத்தும் விதத்தில் அதிக விலைக்கு அந்நிறுவனத்துக்கு வழங்கப்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இது குறித்து, பெங்களூரில் செய்தியாளர்களுடன் பேசிய அசோகா, “இந்தியாவின் வரலாற்றில் குப்பைகளின் பெயரில் ரூ. 35,000 கோடியில் மிகப்பெரும் கொள்ளை நடைபெற்றுள்ளது. இது, உயர் நிலை கருப்பு - பண டெண்டர் முறைகேடாகும்” என்றார். மேற்குறிப்பிட்ட, முறைகேட்டுப் புகார் தொடர்பான ஆவணங்களையும் அவர் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
Advertisement
Advertisement