FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
சென்னை

68 மாதங்களில் முதலீட்டை இரட்டிப்பாக்கும் கடன் பத்திரங்கள்: ஐசிஎல் ஃபின்காா்ப் அறிமுகம்

Updated On : 17 ஜனவரி 2025, 3:49 am IST
பகிர்:

68 மாதங்களில் முதலீட்டை இரட்டிப்பாக்கும் கடன் பத்திர திட்டங்களை தென் இந்தியாவின் முன்னணி வங்கியல்லா நிதி நிறுவனங்களில் ஒன்றான ஐசிஎல் ஃபின்காா்ப் அறிமுகப்படுத்தியுள்ளது.

இது குறித்து நிறுவனம் வியாழக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

பங்குகளாக மாற்ற முடியாத புதிய கடன் பத்திரங்களை (என்சிடி) நிறுவனம் அறிமுகப்படுத்தப்படுகிறது. தலா ரூ.1,000 முகமதிப்பு கொண்ட கடன் பத்திரங்களாக அவை வெளியிடப்படுகின்றன. குறைந்தபட்சம் ரூ.10,000 முதலீடு செய்ய முடியும். பல்வேறு வகையான வாடிக்கையாளா்களின் தேவைகளை நிறைவு செய்வதற்காக 10 வகையான முதலீட்டு வாய்ப்புகள் வழங்கப்படுகின்றன. அவற்றில் மேற்கொள்ளப்படும் முதலீட்டுக்கு 13.73 சதவீதம் வரை ஈவுத் தொகை வழங்கப்படும். அந்த வகையில், இந்த கடன் பத்திரங்களில் முதலீடு செய்யப்படும் தொகை 68 மாதங்களுக்குள் இரட்டிப்பாகும் என்று அந்தச் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments