FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
வணிகம்

ஐசிஎல் ஃபின்கார்ப் நிறுவனத்தின் கடன் பத்திரங்கள் அறிமுகம்!

ஐசிஎல் ஃபின்கார்ப் நிறுவனத்தின் கடன் பத்திரங்கள் பற்றி...

Updated On : 10 ஆகஸ்ட் 2026, 1:48 pm IST
ஐசிஎல் ஃபின்கார்ப் நிர்வாகிகள் - Dinamani
பகிர்:

ஐசிஎல் ஃபின்கார்ப் நிறுவனம் தனது புதிய ’பாதுகாப்பான மீளப்பெறக்கூடிய மாற்றமுடியாத கடன்பத்திரங்களின்’ பொது வெளியீட்டை இன்று அறிமுகம் செய்துள்ளது.

இதுதொடர்பாக ஐசிஎல் ஃபின்கார்ப் நிறுவனம் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:

“நிதி நம்பகத்தன்மையின் 35 ஆண்டுகால பாரம்பரியத்தை தொடர்ந்து பேணிவரும் ஐசிஎல் ஃபின்கார்ப் நிறுவனம், ஆகஸ்ட் 10 ஆம் தேதி முதல் தனது புதிய பாதுகாப்பான மீளப்பெறக்கூடிய மாற்றமுடியாத கடன்பத்திரங்கள் (Secured Redeemable Non-Convertible Debentures - NCDs) பொது வெளியீட்டை அறிமுகப்படுத்துகிறது.

Advertisement

Advertisement

அதிகபட்சம் 12.25% பயனளிக்கும் வருமானம் வழங்கும் இந்த முதலீட்டு வாய்ப்பு, நிலைத்தன்மை, பாதுகாப்பு மற்றும் நெகிழ்வான முதலீட்டு கால அவகாசத்தை நாடும் முதலீட்டாளர்களுக்காக சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த பொது வெளியீடானது, வருகின்ற ஆகஸ்ட் 21 வரை திறந்திருக்கும். இதற்கு CRISIL BBB-/STABLE மதிப்பீடு வழங்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு பங்கின் மதிப்பும் ரூ. 1,000 ஆகும். 13, 24, 36, 60 மற்றும் 72 மாதங்கள் என பல்வேறு முதலீட்டு காலங்கள், மாதாந்திர, ஆண்டு மற்றும் கூட்டு (Cumulative) வட்டி செலுத்தும் விருப்பங்களுடன் கிடைக்கின்றன. வட்டி விகிதம் 10.00% முதல் 12.25% வரை வழங்கப்படும். குறைந்தபட்ச முதலீடு ரூ. 10,000 ஆகும்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

summary

ICL Fincorp launches Secured Redeemable Non-Convertible Debentures - NCD

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments