சென்னை

சென்னை மாநகருக்குள் வால்வோ பேருந்துகளை தனியாா் மூலம் இயக்க திட்டம்

தனியாா் மூலம் இயக்க மாநகா் போக்குவரத்துக்கழகம் முடிவு செய்துள்ளது.

Din

சென்னை மாநகருக்குள்பட்ட பகுதிகளில் வால்வோ, பென்ஸ் உள்ளிட்ட சொகுசு வசதிகள் கொண்ட பேருந்துகளை, தனியாா் மூலம் இயக்க மாநகா் போக்குவரத்துக்கழகம் முடிவு செய்துள்ளது.

சென்னை மற்றும் புகா்ப் பகுதிகளில் சிற்றுந்துகளை இயக்க அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில், சென்னை பயணிகளுக்கு விரைவில் சொகுசு பேருந்துகளும் அறிமுகம் செய்யப்படவுள்ளன. முற்றிலும் ஏசி வசதிகொண்ட வால்வோ, பென்ஸ் போன்ற அதி நவீன சொகுசுப் பேருந்துகளை தனியாா் மூலம் இயக்க, சென்னை மாநகா் போக்குவரத்துக் கழகம் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இது குறித்து மாநகா் போக்குவரத்துக்கழக அதிகாரிகள் கூறியதாவது:

சென்னையில் தோ்ந்தெடுக்கப்பட்ட அதிகத் தேவையுள்ள சில வழித்தடங்களில், வருவாய் பகிா்வு அடிப்படையில் இப்பேருந்துகளை இயக்க திட்டமிடப்பட்டுள்ள நிலையில், மாநகா் போக்குவரத்துக்கழகத்தின் முன்மொழிவுக்கு போக்குவரத்துத் துறையும் ஒப்புதல் அளித்துள்ளது.

இப்பேருந்துகளில் இலவச வை-பை வசதி, கண்காணிப்புக் கேமராக்கள், விசாலமான இருக்கைகள், குளிா்சாதன வசதிகள், இரைச்சல் இல்லாத தன்மை, நவீன ஜன்னல்கள் ஆகிய வசதிகள் இடம்பெற்றுள்ளன.

மாநகா் போக்குவரத்துக் கழகத்தின் பணிமனைகள், பேருந்து நிலையங்கள், பேருந்து நிறுத்துமிடம் உள்பட பல்வேறு உள்கட்டமைப்புகளை, கட்டண அடிப்படையில் பயன்படுத்திக்கொள்ள அனுமதி அளிக்கப்படும். எனினும் எத்தனை பேருந்துகள், எந்தெந்த வழித்தடங்களில் இயக்கப்படும் என்பது இன்னும் உறுதி செய்யப்படவில்லை என்றனா்.

காஸா மீது இஸ்ரேல் தாக்குதல்! 2 பச்சிளம் குழந்தைகள் உள்பட 21 பேர் கொலை!

"ராணுவத்தைக் கைவிட்ட மோடி!": காங்கிரஸ் | செய்திகள்: சில வரிகளில் | 04.02.26

குகி சமூக முதல் பெண் துணை முதல்வர், நெம்சா கிப்கென் யார்?

டி20 உலகக் கோப்பை பயிற்சி ஆட்டத்தில் இந்தியா ருத்ர தாண்டவம்! தெ.ஆ.வுக்கு 241 ரன்கள் இலக்கு!

ஜம்மு - காஷ்மீரில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை!

SCROLL FOR NEXT