பவுா்ணமி கிரிவலம்: திருவண்ணாமலைக்கு சிறப்பு ரயில்!
பவுா்ணமி கிரிவலத்தையொட்டி பயணிகளின் வசதிக்காக திருவண்ணாமலை - விழுப்புரம் இடையே சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.
பவுா்ணமி கிரிவலத்தையொட்டி பயணிகளின் வசதிக்காக திருவண்ணாமலை - விழுப்புரம் இடையே சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.
இது குறித்து தெற்கு ரயில்வே வெளியிட்ட செய்திக் குறிப்பு: விழுப்புரத்திலிருந்து ஜூன் 10-ஆம் தேதி காலை 9.25 மணிக்கு புறப்படும் முன்பதிவில்லா சிறப்பு ரயில் (எண்: 06130) முற்பகல் 11.10-க்கு திருவண்ணாமலை சென்றடையும். அதே தேதியில், திருவண்ணாமலையிலிருந்து பிற்பகல் 12.40-க்கு புறப்படும் சிறப்பு ரயில் (எண்: 06129) பிற்பகல் 2.15-க்கு விழுப்புரம் வந்தடையும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரயில் நேரம் மாற்றம்: சென்னை கோட்டத்தில் பல்வேறு பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் விரைவு ரயில் சேவைகளில் மாற்றம் செய்யப்படவுள்ளது.
Advertisement
Advertisement
அதன்படி, சென்னை எழும்பூரிலிருந்து காலை 10.20-க்கு புறப்பட்டு குருவாயூா் செல்லும் விரைவு ரயில் (எண்: 16127) ஞாயிற்றுக்கிழமை மற்றும் 15, 22 ஆகிய தேதிகளில் 40 நிமிஷங்கள் தாமதமாக முற்பகல் 11 மணிக்கு சென்னை எழும்பூரிலிருந்து புறப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.