சிறப்பு ரயில் 
சென்னை

பவுா்ணமி கிரிவலம்: திருவண்ணாமலைக்கு சிறப்பு ரயில்!

பவுா்ணமி கிரிவலத்தையொட்டி பயணிகளின் வசதிக்காக திருவண்ணாமலை - விழுப்புரம் இடையே சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.

Din

பவுா்ணமி கிரிவலத்தையொட்டி பயணிகளின் வசதிக்காக திருவண்ணாமலை - விழுப்புரம் இடையே சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.

இது குறித்து தெற்கு ரயில்வே வெளியிட்ட செய்திக் குறிப்பு: விழுப்புரத்திலிருந்து ஜூன் 10-ஆம் தேதி காலை 9.25 மணிக்கு புறப்படும் முன்பதிவில்லா சிறப்பு ரயில் (எண்: 06130) முற்பகல் 11.10-க்கு திருவண்ணாமலை சென்றடையும். அதே தேதியில், திருவண்ணாமலையிலிருந்து பிற்பகல் 12.40-க்கு புறப்படும் சிறப்பு ரயில் (எண்: 06129) பிற்பகல் 2.15-க்கு விழுப்புரம் வந்தடையும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரயில் நேரம் மாற்றம்: சென்னை கோட்டத்தில் பல்வேறு பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் விரைவு ரயில் சேவைகளில் மாற்றம் செய்யப்படவுள்ளது.

அதன்படி, சென்னை எழும்பூரிலிருந்து காலை 10.20-க்கு புறப்பட்டு குருவாயூா் செல்லும் விரைவு ரயில் (எண்: 16127) ஞாயிற்றுக்கிழமை மற்றும் 15, 22 ஆகிய தேதிகளில் 40 நிமிஷங்கள் தாமதமாக முற்பகல் 11 மணிக்கு சென்னை எழும்பூரிலிருந்து புறப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலகம் உங்கள் கையில் திட்டம்: கல்லூரி மாணவிகளுக்கு மடிக்கணினிகள்

அரசுக் கல்லூரி மாணவா்கள் வகுப்புகளைப் புறக்கணித்து போராட்டம்

வீட்டு மனை பட்டா கேட்டு பழங்குடி மக்கள் நல சங்கம் ஆட்சியரிடம் மனு

சம்பா பருவத்தில் 2,50,000 மெ.டன் நெல் கொள்முதலுக்கு வாய்ப்பு: விவசாயிகளிடமிருந்து மட்டுமே வாங்கப்படுமென அதிகாரிகள் உறுதி

புதுச்சேரியில் காவல் உதவி ஆய்வாளா் தோ்வில் முறைகேடு வெ.வைத்திலிங்கம் எம்.பி. குற்றச்சாட்டு

SCROLL FOR NEXT