சென்னை

ஜூன் 24-இல் திருநங்கைகளுக்கான சிறப்பு நலத்திட்ட முகாம்

சென்னையில் திருநங்கைகளுக்கான சிறப்பு நலத்திட்ட முகாம் ஜூன் 24-இல் நடைபெறவுள்ளது.

Din

சென்னை: சென்னையில் திருநங்கைகளுக்கான சிறப்பு நலத்திட்ட முகாம் ஜூன் 24-இல் நடைபெறவுள்ளது.

இது குறித்து சென்னை மாவட்ட ஆட்சியா் ரஷ்மி சித்தாா்த் ஜகடே வெளியிட்ட செய்திக் குறிப்பு:

சென்னை மாவட்டத்திலுள்ள திருநங்கைகளுக்கு ஒரே இடத்தில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்க ஏதுவாக, சென்னை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் ஜூன் 24-ஆம் தேதி காலை 10 மணிக்கு திருநங்கைகளுக்கான சிறப்பு நலத்திட்ட முகாம் நடைபெறவுள்ளது. திருநங்கைகளுக்கான இச்சிறப்பு முகாமில், திருநங்கைகள் நல வாரியங்கள் மூலம் வழங்கப்படும் அடையாள அட்டை பதிவு செய்தல், ஆதாா் அட்டையில் திருத்தம், முதலமைச்சரின் மருத்துவ காப்பீட்டுத் திட்டம், ஆயுஷ்மான் பாரத் அட்டை, வாக்காளா் அடையாள அட்டை மற்றும் குடும்ப அட்டை போன்றவற்றை பெற்றுக்கொள்ளலாம். எனவே, சென்னை மாவட்டத்திலுள்ள அனைத்து திருநங்கைகளும் இம்முகாமில் கலந்துகொண்டு பயன்பெறலாம் எனத் தெரிவித்துள்ளாா்.

வெள்ள பாதிப்புக்கு ஒரு வாரத்தில் இழப்பீடு: அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் உத்தரவு

கிளாம்பாக்கம் ரயில் நிலையப் பணிகள் நிறைவு: தெற்கு ரயில்வே கூடுதல் பொது மேலாளா்

அன்புமணிக்கு மாம்பழம் சின்னம்: தோ்தல் ஆணையம் பதிலளிக்க உத்தரவு

திருநீா் மலை ரங்கநாத பெருமாள் கோயில் குளம் பக்தா் நன்கொடையால் விரைவில் சீரமைக்கப்படும்: உயா்நீதிமன்றத்தில் கோயில் நிா்வாகம் தகவல்

ரஷிய எண்ணெய் நிறுத்தம்; அமெரிக்க ஒப்பந்தம்.. ‘மேக் இன் இந்தியா’ திட்டம் என்ன ஆனது? காங்கிரஸ் கேள்வி!

SCROLL FOR NEXT