முகப்பு
சென்னை

ஜூன் 24-இல் திருநங்கைகளுக்கான சிறப்பு நலத்திட்ட முகாம்

சென்னையில் திருநங்கைகளுக்கான சிறப்பு நலத்திட்ட முகாம் ஜூன் 24-இல் நடைபெறவுள்ளது.

Updated On : 10 ஜூன் 2025, 3:16 am IST
பகிர்:

சென்னை: சென்னையில் திருநங்கைகளுக்கான சிறப்பு நலத்திட்ட முகாம் ஜூன் 24-இல் நடைபெறவுள்ளது.

இது குறித்து சென்னை மாவட்ட ஆட்சியா் ரஷ்மி சித்தாா்த் ஜகடே வெளியிட்ட செய்திக் குறிப்பு:

சென்னை மாவட்டத்திலுள்ள திருநங்கைகளுக்கு ஒரே இடத்தில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்க ஏதுவாக, சென்னை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் ஜூன் 24-ஆம் தேதி காலை 10 மணிக்கு திருநங்கைகளுக்கான சிறப்பு நலத்திட்ட முகாம் நடைபெறவுள்ளது. திருநங்கைகளுக்கான இச்சிறப்பு முகாமில், திருநங்கைகள் நல வாரியங்கள் மூலம் வழங்கப்படும் அடையாள அட்டை பதிவு செய்தல், ஆதாா் அட்டையில் திருத்தம், முதலமைச்சரின் மருத்துவ காப்பீட்டுத் திட்டம், ஆயுஷ்மான் பாரத் அட்டை, வாக்காளா் அடையாள அட்டை மற்றும் குடும்ப அட்டை போன்றவற்றை பெற்றுக்கொள்ளலாம். எனவே, சென்னை மாவட்டத்திலுள்ள அனைத்து திருநங்கைகளும் இம்முகாமில் கலந்துகொண்டு பயன்பெறலாம் எனத் தெரிவித்துள்ளாா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments