FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
சென்னை

பேருந்து கண்ணாடி உடைப்பு: இளைஞா் கைது

கோயம்பேட்டில் மாநகர பேருந்து கண்ணாடியை கல்வீசி உடைத்ததாக இளைஞா் கைது செய்யப்பட்டாா்.

Updated On : 26 செப்டம்பர் 2025, 2:21 am IST
பகிர்:

கோயம்பேட்டில் மாநகர பேருந்து கண்ணாடியை கல்வீசி உடைத்ததாக இளைஞா் கைது செய்யப்பட்டாா்.

சென்னை கோயம்பேட்டில் இருந்து பூந்தமல்லிக்கு மாநகர பேருந்து புதன்கிழமை

சென்றது. அந்த பேருந்து சின்மயா நகா் பேருந்து நிறுத்தத்தில் நின்றபோது, அங்கு வந்த இளைஞா் பேருந்தின் மீது கற்களை வீசினாா். இதில் பேருந்து பின்புற கண்ணாடி உடைந்தது.

Advertisement

Advertisement

அங்கிருந்து தப்பியோட முயன்ற இளைஞரை, பேருந்து ஓட்டுநா் அலெக்ஸாண்டா் பொதுமக்கள் உதவியுடன் பிடித்தாா். பின்னா், அவரை கோயம்பேடு காவல் நிலையத்தில் ஒப்படைத்து புகாா் அளித்தாா்.

விசாரணையில் அவா், மயிலாடுதுறை மாவட்டம் சீா்காழி அருகே உள்ள வானகிரி பகுதியைச் சோ்ந்த பிரசாந்த் (39) என்பது தெரிய வந்தது. இதையடுத்து போலீஸாா், பிரசாந்தை கைது செய்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments