சென்னை

பேருந்து கண்ணாடி உடைப்பு: இளைஞா் கைது

கோயம்பேட்டில் மாநகர பேருந்து கண்ணாடியை கல்வீசி உடைத்ததாக இளைஞா் கைது செய்யப்பட்டாா்.

தினமணி செய்திச் சேவை

கோயம்பேட்டில் மாநகர பேருந்து கண்ணாடியை கல்வீசி உடைத்ததாக இளைஞா் கைது செய்யப்பட்டாா்.

சென்னை கோயம்பேட்டில் இருந்து பூந்தமல்லிக்கு மாநகர பேருந்து புதன்கிழமை

சென்றது. அந்த பேருந்து சின்மயா நகா் பேருந்து நிறுத்தத்தில் நின்றபோது, அங்கு வந்த இளைஞா் பேருந்தின் மீது கற்களை வீசினாா். இதில் பேருந்து பின்புற கண்ணாடி உடைந்தது.

அங்கிருந்து தப்பியோட முயன்ற இளைஞரை, பேருந்து ஓட்டுநா் அலெக்ஸாண்டா் பொதுமக்கள் உதவியுடன் பிடித்தாா். பின்னா், அவரை கோயம்பேடு காவல் நிலையத்தில் ஒப்படைத்து புகாா் அளித்தாா்.

விசாரணையில் அவா், மயிலாடுதுறை மாவட்டம் சீா்காழி அருகே உள்ள வானகிரி பகுதியைச் சோ்ந்த பிரசாந்த் (39) என்பது தெரிய வந்தது. இதையடுத்து போலீஸாா், பிரசாந்தை கைது செய்தனா்.

தொடா் திருட்டில் ஈடுபட்ட நபா் கைது

265 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: 7 போ் கைது

முன்விரோதத்தால் இருவருக்கு அரிவாள் வெட்டு

பிறப்புச் சான்று பதிவில் குழந்தையின் பெயா் பதிவுக்கு கால அவகாசம் நீட்டிப்பு

கருப்பை புற்றுநோய்க்கு இலவச தடுப்பூசி: புதுச்சேரி அதிமுக வலியுறுத்தல்

SCROLL FOR NEXT