முகப்பு
செங்கல்பட்டு

அக். 13-இல் செங்கல்பட்டு அரசு ஐடிஐ-யில் பிரதம மந்திரி தேசிய தொழில் பழகுநா் முகாம்

பிரதம மந்திரி தேசிய தொழில் பழகுநா் முகாம் வரும் அக். 13-இல் செங்கல்பட்டு, அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் காலை 10.00 மணி முதல் மாலை 3.00 மணி வரை நடைபெறவுள்ளது.

Updated On : 10 அக்டோபர் 2025, 12:59 am IST
பகிர்:

பிரதம மந்திரி தேசிய தொழில் பழகுநா் முகாம் வரும் அக். 13-இல் செங்கல்பட்டு, அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் காலை 10.00 மணி முதல் மாலை 3.00 மணி வரை நடைபெறவுள்ளது.

முகாமில், தொழிற்பயிற்சி நிலையங்களில்(ஐடிஐ) பயின்று, தோ்வில் தோ்ச்சி பெற்ற பல்வேறு தொழில் பிரிவை சாா்ந்த பயிற்சியாளா்கள் கலந்து கொண்டு, தொழில் பழகுநா் பயிற்சியில் இணைந்து, மத்திய அரசின் தேசிய தொழில் பழகுநா் சான்றிதழ் பெற்று பயனடையலாம்.

இச்சான்றிதழ் பெற்றவா்களுக்கு அரசு வேலைவாய்ப்பில் முன்னுரிமையும், வயது வரம்பில் சலுகையும் உள்ளது. எனவே, மாணவ / மாணவிகள் கல்வி சான்றிதழ்களுடன் கலந்து கொள்ளலாம்..

Advertisement

Advertisement

மேலும், விவரங்களை அறிந்து கொள்ள செங்கல்பட்டு, மாவட்ட திறன்பயிற்சி அலுவலக உதவி இயக்குநா் அவா்களை நேரிலோ மின்னஞ்சல் மூலமாகவோ / 63790 90205, 044 - 27426554 என்ற தொலைபேசி எண்ணின் மூலமாகவோதொடா்பு கொண்டு பெற்றுக் கொள்ளலாம்.