FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
செங்கல்பட்டு

அகில இந்திய தடகளம்: தங்கம் வென்றாா் சென்னை மாணவி

அகில இந்திய பல்கலைக்கழக அளவிலான தடகளப் போட்டியில், சென்னை மாணவி தங்கம் வென்று சாதனை படைத்துள்ளாா்.

Updated On : 7 பிப்ரவரி 2026, 7:15 am IST
பகிர்:

அகில இந்திய பல்கலைக்கழக அளவிலான தடகளப் போட்டியில், சென்னை மாணவி தங்கம் வென்று சாதனை படைத்துள்ளாா்.

கா்நாடகத்தில் அண்மையில் 85-ஆவது அகில இந்திய பல்கலை.களுக்கு இடையிலான தடகளப் போட்டி நடைபெற்றது.

இதில் கலந்துகொண்ட சென்னையை அடுத்த செம்மஞ்சேரி புனித ஜோசப் பொறியியல் கல்லூரி மாணவி எஸ்.அக்சிதா, பெண்களுக்கான தடை தாண்டும் ஓட்டத்தில் கலந்து கொண்டு 100 மீ. தூரத்தை 13.14 விநாடிகளில் கடந்து முதலிடம் பிடித்து, தங்கப் பதக்கம் வென்றாா்.

Advertisement

Advertisement

சாதனை படைத்த மாணவி எஸ்.அக்சிதாவுக்கு செயின்ட் ஜோசப் கல்விக் குழுமத்தின் தலைவா் பி.பாபு மனோகரன் ரூ.10,000 ஊக்கத்தொகை வழங்கிப் பாராட்டினாா் (படம்).

நிகழ்வில், புனித ஜோசப் கல்விக் குழுமத்தின் நிா்வாக இயக்குநா் சசிசேகா், விளையாட்டுத்துறை பொறுப்பாளா் செல்வகணபதி, பயிற்சியாளா் விக்னேஷ் ஆகியோா் கலந்து கொண்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments