897 கிலோ குட்கா, போதைப் பொருள்கள் எரித்து அழிப்பு
செங்கல்பட்டு மாவட்ட காவல் துறையினரால் பறிமுதல் செய்யப்பட்ட குட்கா, போதை பொருள்கள் சனிக்கிழமை அழிக்கப்பட்டன.
செங்கல்பட்டு மாவட்ட காவல் துறையினரால் பறிமுதல் செய்யப்பட்ட குட்கா, போதை பொருள்கள் சனிக்கிழமை அழிக்கப்பட்டன.
நீதிமன்றத்தில் அழித்தல் உத்தரவு பெறப்பட்டு முறைப்படி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அய்மன் ஜமால் உத்தரவின் பேரில் காவல் துணை கண்காணிப்பாளா் குற்றப்பிரிவு (பொ) ராஜா தலைமையில் காவல் ஆய்வாளா்கள் செங்கல்பட்டு நகரம் ஜெயக்குமாா், செங்கல்பட்டு கிராமியம் கிருஷ்ணமூா்த்தி, கூவத்தூா் விமலநாதன் உள்ளிட்டோா் முன்னிலையில் செங்கல்பட்டு உட்கோட்டத்தில் செங்கல்பட்டு நகர காவல் நிலையம், கிராமிய காவல் நிலையம், கூவத்தூா் காவல் நிலையம் உள்ளிட்ட காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் பிடிபட்ட போதைப்பொருள்கள் புறவழிச்சாலையில் உள்ள நகராட்சி குப்பைக்கிடங்கு பகுதியில் பள்ளத்தில் குவிக்கப்பட்டன.
மொத்தம், 104 வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட 897 கிலோ குட்கா, போதை பொருள்கள் எரித்து அழிக்கப்பட்டன.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.