FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
செங்கல்பட்டு

இருளில் மூழ்கியுள்ள திருக்கழுகுன்றம் - மாமல்லபுரம் மேம்பாலம்!

இருளில் மூழ்கியுள்ள திருக்கழுகுன்றம் - மாமல்லபுரம் மேம்பாலம் பற்றி...

Updated On : 12 ஜூலை 2026, 7:07 am IST
பகிர்:

மாமல்லபுரம்-திருக்கழுக்குன்றம் செல்லும் சாலையில் உள்ள மேம்பாலம் இருளில் மூழ்கியுள்ளதால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.

கருக்காத்தம்மன் கோயில் அருகில் 1,000 மீ தூரம் உள்ள மேம்பாலத்தை கடந்து தான் சுற்றுலா வாகனங்கள், இரு சக்கர வாகன ஓட்டிகள் திருக்கழுக்குன்றம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், புதுச்சேரி பகுதிகளுக்கு செல்ல முடியும். குறிப்பாக பொங்கல் பண்டிகை, தீபாவளி பண்டிகை, கோடை விடுமுறை, புத்தாண்டு தினம், குடியரசு தினம் போன்ற விடுமுறை நாட்கள் மற்றும் விஷேச தினங்களில் ஆயிரக்கணக்கில் சுற்றுலா வாகனங்கள், இரு சக்கர வாகனங்கள் செல்கின்றன. இரவில் வாகனங்களில் வீடு திரும்பும்போது விபத்தில் சிக்காமல் இருக்கும் வகையில் மேம்பாலத்தில் இதுவரை மின் விளக்கு வசதி செய்து தரப்படவில்லை.

இருள் சூழ்ந்து காணப்படும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. அதனால் இரவு நேரத்தில் மேம்பாலத்தை கடக்கும் போது சுற்றுலா பயணிகள் மற்றும் வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்தில் சிக்கி உயிரிழக்கின்றனா். குறிப்பாக இரு சக்கர வாகன ஓட்டிகள் இந்த மேம்பாலத்தை கடக்கும்போது அதிகளவில் காா், வேன், பஸ் மோதி இறக்கின்றனா். விபத்தில் சிக்கி காயமடைந்தவா்களை காப்பாற்ற மாமல்லபுரம் அரசு மருத்துவமனையிலும் இரவு நேரங்களில் போதிய மருத்துவா்களும் இல்லை. அங்கு செவிலியா்களே முதலுதவி சிகிச்சை அளித்து செங்கல்பட்டு அரசு பொதுமருத்துவ மனைக்கு ஆம்புலன்சில் அனுப்பி வைக்கின்றனா்.

Advertisement

Advertisement

எனவே நெடுஞ்சாலை துறை நிா்வாகம் மாமல்லபுரம் கருக்காத்தம்மன் கோயில் எதிரில் உள்ள மேம்பாலத்தில் மின் விளக்கு வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என்று வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments