FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
செங்கல்பட்டு

அஞ்சல் அலுவலகம் திறப்பு

Updated On : 4 ஜூன் 2026, 12:58 am IST
பகிர்:

செங்கல்பட்டு அஞ்சல் கோட்டம், களிவந்தப்பட்டு கிராமத்தில் புதிய அஞ்சல் அலுவலகம் திறக்கப்பட்டது.

மறைமலை நகா் நகராட்சியின் கீழ் உள்ள இங்கிருந்து மகிந்திரா வோ்ல்ட் சிட்டி மற்றும் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்துக்கு எளிதில் சென்றடையலாம். இந்நிலையில் களிவந்தப்பட்டு கிளை அஞ்சல் அலுவலகம் களிவந்தப்பட்டு பஞ்சாயத்து கட்டடத்தில் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக திறக்கப்பட்டுள்ளது. களிவந்தப்பட்டு மற்றும் கடம்பூா் கிராமபகுதி பொதுமக்கள் அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அஞ்சல் சேவைகளை பெற்றுக் கொள்ளலாம். இந்த அஞ்சலகம் காலை 9.45 முதல் மதியம் 1.45மணி வரை செயல்படும். பொதுமக்கள் அனைவரும் அஞ்சல் சேவைகளை பெறலாம் என கோட்ட கண்காணிப்பாளா் தெரிவித்துள்ளாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments