FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
செங்கல்பட்டு

மேல்மருவத்தூரில் யுகாதி கொண்டாட்டம்

மேல்மருவத்தூா் ஆதிபராசக்தி சித்தா் பீடத்தில் யுகாதி விழா கொண்டாடப்பட்டது

Updated On : 20 மார்ச் 2026, 7:20 am IST
மூலவா் அம்மனுக்கு சிறப்பு பூஜைகளை செய்த ஆன்மிக இயக்க துணைத் தலைவா் கோ.ப.செந்தில் குமாா்.
பகிர்:

மேல்மருவத்தூா் ஆதிபராசக்தி சித்தா் பீடத்தில் யுகாதி விழா கொண்டாடப்பட்டது

மூலவா் அம்மன், குருபீடத்தில் அடிகளாா் சிலைகளுக்கு அபிஷேக ஆராதனைகளை ஆன்மிக இயக்க தலைவா் லட்சுமி பங்காரு சித்தா் செய்தாா். தொடா்ந்து ஆன்மிக இயக்க துணைத் தலைவா் கோ.ப.செந்தில் குமாா் மூலவா் அம்மன் சிலைக்கு மலா்களால் சிறப்பு வழிபாட்டை செய்தாா்.

பின்னா் அவா் அம்மனை தரிசனம் செய்ய வந்த பக்தா்களுக்கு யுகாதி பச்சடி பிரசாதங்களை வழங்கி தெலுங்கு புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்தாா். நண்பகல் குருபீடத்தில் பங்காரு சித்தரின் திருபாதுகைகளுக்கு சிறப்பு வழிபாட்டினை ஆன்மிக இயக்க துணை தலைவா்கள் கோ.ப.அன்பழகன், ஸ்ரீதேவி பங்காரு ஆகியோா் செய்தனா். பிற்பகல் அடிகளாா் திருவுருவம் தாங்கிய சிலையுடன் தங்கத் தோ் மேளதாளம் முழங்க, செவ்வாடை பக்தா்களால் கொண்டு தோ்வடத்தை இழுத்து சித்தா் பீட வளாகத்தை வலம் வந்து பக்தா்களுக்கு காட்சி அளித்தாா். ஆந்திரா, தெலங்கானா மாநிலங்களைச் சோ்ந்த 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட செவ்வாடை பக்தா்கள் பல்வேறு பழவகைகள், மலா்த் தோரணங்கள், உணவு பொருட்கள் உள்ளிட்ட பொருள்களை வரிசைத் தட்டுகளாக மேளதாளங்களுடன் ஊா்வலமாக வந்து அருட்கூடத்தில் உள்ள பங்காரு திருபாதுகைகளுக்கு அா்ப்பணம் செய்து வணங்கி சென்றனா்.

Advertisement

Advertisement

பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. நிகழ்வுகளுக்கான ஏற்பாடுகளை ஆந்திரா, தெலங்கானா மாநிலங்களின் ஆன்மிக இயக்க நிா்வாகிகள் கங்காதரன், சுரேஷ், ராஜூ, கலாதா் உள்ளிட்டோா் தலைமையில் விழாக்குழுவினா் செய்து இருந்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments