எழுத்தாளர் சங்கத்தின் தேசியத் தலைவராக விக்ரமன் தேர்வு
அனைத்திந்திய எழுத்தாளர் சங்கத்தின் தேசியத் தலைவராக எழுத்தாளர் விக்ரமன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அந்த சங்கத்தின் பொதுச் செயலாளராக நல்லாமூர் முனைவர் கோ.பெரியண்ணனும், பொருளாளராக புலவர் இரா.ராமமூர்த்தியும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
அனைத்திந்திய எழுத்தாளர் சங்கத்தின் தேசியத் தலைவராக எழுத்தாளர் விக்ரமன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அந்த சங்கத்தின் பொதுச் செயலாளராக நல்லாமூர் முனைவர் கோ.பெரியண்ணனும், பொருளாளராக புலவர் இரா.ராமமூர்த்தியும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள விக்ரமன் அமுதசுரபி, இலக்கிய நந்தவனம் ஆகிய இதழ்களின் ஆசிரியாகவும் பொறுப்பு வகித்துள்ளார். தேசியப் பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள கோ. பெரியண்ணன் கிராமந்தோறும் நூலகம் இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் நல்லாமூரில் நூலகம் அமைக்க அரசுக்கு இலவசமாக நிலம் வழங்கியவர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.