வெள்ள நிவாரண நிதி திரட்ட சென்னையில் நாளை மாரத்தான்
வெள்ள நிவாரணத்துக்கு நிதி திரட்டுவதற்காக "அம்மா ஸ்போர்ட்ஸ் ஃபவுண்டேசன்' சார்பில் ஏபிஜெ அப்துல்கலாம் சர்வதேச மாரத்தான் போட்டி,
வெள்ள நிவாரணத்துக்கு நிதி திரட்டுவதற்காக "அம்மா ஸ்போர்ட்ஸ் ஃபவுண்டேசன்' சார்பில் ஏபிஜெ அப்துல்கலாம் சர்வதேச மாரத்தான் போட்டி, நடைபயணம் ஆகியவை சென்னையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளன.
இதுகுறித்து அந்த ஃபவுண்டேசனின் தலைவர் ஜி.வீரராகவலு சென்னையில் செய்தியாளர்களிடம் வியாழக்கிழமை மேலும் கூறியது:
10 கி.மீ. மாரத்தான் மெரீனா கடற்கரையில் உள்ள எம்.ஜி.ஆர். நினைவிடத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை 5 மணிக்கும், இரண்டரை கிலோ மீட்டர் நடைபயணம் அதே இடத்தில் காலை 7 மணிக்கும் தொடங்கவுள்ளது. இணையதளம் மூலம் இதுவரை 10,000-க்கும் மேற்பட்டோர் முன்பதிவு செய்துள்ளனர்.
இவற்றில் பங்கேற்க விரும்புவோர் ஹம்ம்ஹள்ல்ர்ழ்ற்ள்ச்ர்ன்ய்க்ஹற்ண்ர்ய்.ஸ்ரீர்ம், ஜ்ஜ்ஜ்.க்ஷர்ர்ந்ம்ஹ்ள்ட்ர்ஜ்.ஸ்ரீர்ம் ஆகிய இணையதளங்களில் சனிக்கிழமை இரவு வரை பதிவு செய்யலாம். இதன் மூலம் கிடைக்கும் தொகை வெள்ள நிவாரண நிதிக்கு வழங்கப்படும் என்றார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.