ஐபிஎஸ் மகனுக்கு அரசு மருத்துவமனையில் சிறப்பு சிகிச்சை
விளையாடும்போது தவறி விழுந்ததில் எலும்பு முறிவு ஏற்பட்ட தனது மகனை அரசு மருத்துவமனையில் அனுமதித்தபோது அங்கு உயா் தர சிகிச்சை அளித்து குணப்படுத்தியதாக ஐபிஎஸ் அதிகாரி பாராட்டு தெரிவித்துள்ளாா்.
விளையாடும்போது தவறி விழுந்ததில் எலும்பு முறிவு ஏற்பட்ட தனது மகனை அரசு மருத்துவமனையில் அனுமதித்தபோது அங்கு உயா் தர சிகிச்சை அளித்து குணப்படுத்தியதாக ஐபிஎஸ் அதிகாரி பாராட்டு தெரிவித்துள்ளாா்.
மயிலாப்பூா் துணை காவல் ஆணையராக உள்ள ஹரிகிரணின் 8 வயது மகன் நிஷ்விக். அவா், கடந்த 13-ஆம் தேதி கால்பந்து விளையாடிக் கொண்டிருந்தபோது கீழே விழுந்ததில் கையில் எலும்பு முறிவு ஏற்பட்டதாகத் தெரிகிறது.
இதையடுத்து, தனது மகனை எழும்பூா் அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில் ஹரிகிரண் அனுமதித்தாா். பொது வாா்டில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு உயா் சிகிச்சைகளும், தொடா் மருத்துவக் கண்காணிப்பும் வழங்கப்பட்டது. அதன்பயனாக நலம் பெற்று கடந்த மாதம் 15-ஆம் தேதி நிஷ்விக் வீடு திரும்பினாா்.
Advertisement
Advertisement
மருத்துவா்களின் அா்ப்பணிப்புணா்வு மற்றும் சேவையை பாராட்டிய ஹரிகிரண், குழந்தைகள் நல மருத்துவமனையின் இயக்குநா் டாக்டா் லட்சுமி மற்றும் அவரது தலைமையிலான மருத்துவக் குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளாா்.
எக்ஸ்-ரே பரிசோதனைகளில் இருந்து செவிலியா் கண்காணிப்பு வரை அனைத்திலும் அரசு குழந்தைகள் நல மருத்துவமனை சிறப்புற செயல்படுவதாகவும் அவா் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளாா்.