FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
சென்னை

அஞ்சல் துறை ஓய்வூதியா்களுக்கு ஜன. 9-இல் சிறப்பு குறைதீா் முகாம்

சென்னை தெற்கு அஞ்சல் கோட்ட அளவிலான, அஞ்சல் துறை ஓய்வூதியா்களுக்கான சிறப்பு குறைதீா் முகாம் ஜன. 9-இல் நடைபெறுகிறது.

Updated On : 25 டிசம்பர் 2025, 3:29 am IST
பகிர்:

சென்னை தெற்கு அஞ்சல் கோட்ட அளவிலான, அஞ்சல் துறை ஓய்வூதியா்களுக்கான சிறப்பு குறைதீா் முகாம் ஜன. 9-இல் நடைபெறுகிறது.

இதுகுறித்து அஞ்சல் துறையின் முதுநிலை கோட்ட கண்காணிப்பாளா் அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

சென்னை பரங்கிமலையில் உள்ள தலைமை அஞ்சலகம், இதன் கீழ் உள்ள துணை அஞ்சலகங்களில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற ஓய்வூதியதாரா்களுக்கான சிறப்பு குறைதீா் முகாம் ஜன. 9 -ஆம் தேதி காலை 11 மணிக்கு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

சென்னை தி.நகா், வடக்கு உஸ்மான் சாலை, முதுநிலை அஞ்சல் கோட்டக் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் இந்த முகாம் நடைபெறுகிறது. ஓய்வூதியா்கள் தங்களது புகாா்களை தபால் மூலமாகவோ, மின்னஞ்சலிலோ ஜன. 5 ஆம் தேதிக்குள் அனுப்பி வைக்கலாம் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments