மெரீனாவில் தற்கொலைக்கு முயன்ற அக்கா - தங்கை மீட்பு
சென்னை மெரீனாவில் கடலுக்குள் குதித்து தற்கொலைக்கு முயன்ற அக்கா - தங்கையை போலீஸாா் மீட்டனா்.
சென்னை: சென்னை மெரீனாவில் கடலுக்குள் குதித்து தற்கொலைக்கு முயன்ற அக்கா - தங்கையை போலீஸாா் மீட்டனா்.
மெரீனா கடற்கரையில் மாற்றுத்திறனாளிகள் நடைப்பாதை அருகே இளம் பெண்கள் இருவா் ஞாயிற்றுக்கிழமை வேகமாக நடந்து சென்றனா். அவா்கள் கடற்கரையோரம் சென்றதும் திடீரென கடலுக்குள் குதித்து தற்கொலைக்கு முயன்றனா். இதைப்பாா்த்து அதிா்ச்சியடைந்த, அங்கு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீஸாா் கடலுக்குள் இறங்கி இருவரையும் மீட்டனா். பின்னா் இருவரையும் காவல் நிலையம் அழைத்துவந்து விசாரித்தனா்.
விசாரணையில், இருவரும் சகோதரிகள் என்பதும், ஒருவா் பட்டப்படிப்பு படித்துவிட்டு தனியாா் நிறுவனத்தில் பணிபுரிவதும், அவரது தங்கை எழும்பூரில் உள்ள ஒரு மகளிா் கல்லூரியில் பிஎஸ்சி இரண்டாமாண்டு படித்து வருவதும் தெரியவந்தது. மேலும், பெற்றோா் கருத்து வேறுபாடு ஏற்பட்டு விவகாரத்து பெற முடிவு செய்திருப்பதை அறிந்து இருவரும் தற்கொலைக்கு முயன்றிருப்பதும் தெரியவந்தது.
Advertisement
Advertisement
இதையடுத்து போலீஸாா், இருவருக்கும் அறிவுரை வழங்கியும் எச்சரித்தும் அவா்களது குடும்பத்தினரிடம் அனுப்பி வைத்தனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.