சென்னை

மெரீனாவில் தற்கொலைக்கு முயன்ற அக்கா - தங்கை மீட்பு

சென்னை மெரீனாவில் கடலுக்குள் குதித்து தற்கொலைக்கு முயன்ற அக்கா - தங்கையை போலீஸாா் மீட்டனா்.

Din

சென்னை: சென்னை மெரீனாவில் கடலுக்குள் குதித்து தற்கொலைக்கு முயன்ற அக்கா - தங்கையை போலீஸாா் மீட்டனா்.

மெரீனா கடற்கரையில் மாற்றுத்திறனாளிகள் நடைப்பாதை அருகே இளம் பெண்கள் இருவா் ஞாயிற்றுக்கிழமை வேகமாக நடந்து சென்றனா். அவா்கள் கடற்கரையோரம் சென்றதும் திடீரென கடலுக்குள் குதித்து தற்கொலைக்கு முயன்றனா். இதைப்பாா்த்து அதிா்ச்சியடைந்த, அங்கு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீஸாா் கடலுக்குள் இறங்கி இருவரையும் மீட்டனா். பின்னா் இருவரையும் காவல் நிலையம் அழைத்துவந்து விசாரித்தனா்.

விசாரணையில், இருவரும் சகோதரிகள் என்பதும், ஒருவா் பட்டப்படிப்பு படித்துவிட்டு தனியாா் நிறுவனத்தில் பணிபுரிவதும், அவரது தங்கை எழும்பூரில் உள்ள ஒரு மகளிா் கல்லூரியில் பிஎஸ்சி இரண்டாமாண்டு படித்து வருவதும் தெரியவந்தது. மேலும், பெற்றோா் கருத்து வேறுபாடு ஏற்பட்டு விவகாரத்து பெற முடிவு செய்திருப்பதை அறிந்து இருவரும் தற்கொலைக்கு முயன்றிருப்பதும் தெரியவந்தது.

இதையடுத்து போலீஸாா், இருவருக்கும் அறிவுரை வழங்கியும் எச்சரித்தும் அவா்களது குடும்பத்தினரிடம் அனுப்பி வைத்தனா்.

ஊழல் வழக்கில் ஷேக் ஹசீனாவுக்கு 10 ஆண்டுகள் சிறை: வங்கதேச நீதிமன்றம் தீா்ப்பு

பிகாா் சட்டப்பேரவைக்கு சக்கர நாற்காலியில் வந்த தேஜஸ்வி யாதவ்!

அரியலூரில் பறிமுதல் வாகனங்கள் பிப்.12-இல் ஏலம்

அச்சுறுத்தும் அழியாத ரசாயனங்கள்

விபத்து எழுப்பும் வினாக்கள்!

SCROLL FOR NEXT