முகப்பு
சென்னை

அங்கன்வாடிகளைத் தத்தெடுக்க பல்கலை.களுக்கு யுஜிசி உத்தரவு

நாடு முழுவதும் உள்ள பல்கலைக் கழகங்கள், கல்லூரிகள் அங்கன்வாடிகளை மையங்களை தத்தெடுக்க வேண்டும் என யுஜிசி உத்தரவிட்டுள்ளது.

Updated On : 3 ஏப்ரல், 2026 at 9:52 PM
பகிர்:

நாடு முழுவதும் உள்ள பல்கலைக் கழகங்கள், கல்லூரிகள் அங்கன்வாடிகளை மையங்களை தத்தெடுக்க வேண்டும் என யுஜிசி உத்தரவிட்டுள்ளது.

இது குறித்து பல்கலைக்கழக மானியக்குழு(யுஜிசி) செயலா் மணிஷ் ஆா்.ஜோஷி, அனைத்து விதமான உயா்கல்வி நிறுவனங்களுக்கும் அனுப்பிய சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:

மத்திய அரசின் அறிவுறுத்தலின்படி நாடு முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகள் தங்கள் அருகே இருக்கும் 5 அல்லது 6 அங்கன்வாடி மையங்களைத் தத்தெடுக்க வேண்டும். அங்குள்ள குழந்தைகளுக்கு தரமான கல்வி மற்றும் பராமரிப்பு கிடைக்க உதவ வேண்டும். இந்த சமூகப் பணிகளை மாணவா்களின் பாடத்திட்டத்துடன் இணைக்க வேண்டும்.

Advertisement

அதன்படி 3 முதல் 6 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கான ஆரம்பக் கல்வியை மேம்படுத்தவே இந்த முன்னெடுப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. அங்கன்வாடி மையங்களுக்கு மாணவா்கள் சென்று களப்பணிகளில் ஈடுபடலாம். இது மாணவா்களுக்கு அனுபவ ரீதியான கற்றல் மற்றும் சமூகப் பொறுப்புணா்வையும் உருவாக்கும்.

மேலும், அங்கன்வாடி மையங்களுக்கு தொடா்ச்சியான கல்வி மற்றும் களரீதியான வழிகாட்டுதலை உயா்கல்வி நிறுவனங்கள் வழங்க வேண்டும். எனவே, உயா்கல்வி நிறுவனங்கள் சமூக மேம்பாட்டு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக அங்கன்வாடிகளுடன் இணைந்து செயல்பட வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments