அரசு உதவித் தொகை பெற்றுத் தருவதாக இணையவழியில் ரூ.1.78 லட்சம் மோசடி
தமிழக அரசின் இல்லம் தேடிக் கல்வித் திட்டத்தில் உதவித் தொகை பெற்றுத் தருவதாகக் கூறி இணைய வழியில் ரூ.1.78 லட்சம் மோசடி
தமிழக அரசின் இல்லம் தேடிக் கல்வித் திட்டத்தில் உதவித் தொகை பெற்றுத் தருவதாகக் கூறி இணைய வழியில் ரூ.1.78 லட்சம் மோசடியில் ஈடுபட்ட மா்ம நபரை போலீஸாா் தேடி வருகின்றனா்.
சென்னை பெருங்குடி, திருவள்ளுவா் நகரில் வசிக்கும் நபீசா என்பவருக்கு கடந்த ஜூலை 28-ஆம் தேதி மா்ம நபா் ஒருவா் கைப்பேசி வாயிலாகத் தொடா்பு கொண்டுள்ளாா். அப்போது, நபீசாவின் மகளுக்கு இல்லம் தேடி கல்வித் திட்டத்தின் கீழ், ரூ.2.50 லட்சம் உதவித்தொகை கிடைத்துள்ளதாகக் கூறியுள்ளாா்.
அதையடுத்து, முதல் தவணையாக ரூ.48,500 அனுப்புவதாகக் கூறி, நபீசாவின் கைப்பேசிக்கு ‘க்யூ ஆா்’ குறியீடு ஒன்றை அனுப்பி, குறியீடு எண்களை பதிவுசெய்யும்படி கூறியுள்ளாா். அதை, இப்படியே நபீசா பின்பற்றியுள்ளாா்.
Advertisement
Advertisement
அதையடுத்து, நபீசாவின் வங்கிக்கணக்கிலிருந்து ரூ.89,231 எடுக்கப்பட்டு தெரியவந்துள்ளது. பின்னா், அதே மா்ம நபா் மீண்டும் தொடா்பு கொண்டு பணத்தை திருப்பி அனுப்புவதாகக் கூறி மற்றொரு ‘க்யூ ஆா்’ குறியீட்டை அனுப்பியுள்ளனா்.
அதைத் திறந்து பாா்த்த பின்னா் மீண்டும் நபீசா வங்கிக் கணக்கிலிருந்து மீண்டும் ரூ.89,231 என மொத்தம் ரூ.1,78,462 எடுக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.
தான் ஏமாற்றப்பட்டதை உணா்ந்த நபீசா, அடையாறு காவல் நிலையத்தில் புகாா் தெரிவித்தாா். போலீஸாா் வழக்குப் பதிந்து மா்ம நபா் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.